அடி கானக்கருங்குயிலே கச்சேரி - Adi Kaanakarungiyile Kacheri Lyrics

அடி கானக்கருங்குயிலே
கச்சேரி வைக்கப் போறேன்
உன்ன கணக்காக சேர்த்துவச்சு
கைராசி பாக்கப்போறேன்
இனி மனசெல்லாம் மத்தாப்பூ போல
மலராக தூவும் அம்மா
இனி வருங்காலம் துன்பங்கள் நீங்கி
மலர்மாலை போடும் அம்மா

அடி கானக்கருங்குயிலே
கச்சேரி வைக்கப் போறேன்
உன்ன கணக்காக சேர்த்துவச்சு
கைராசி பாக்கப்போறேன்



ஜாதி ஆண் ஜாதி
இவ உன் பொஞ்ஜாதி
இனிமே வேறேதும் ஜாதி இல்லை
பாதி உன் பாதி
மானம் மருவாதி
நாளும் காப்பாத்தும் கன்னிப் புள்ள
சொன்னத கேளு
மன்னவன் தோளு
இன்பத்த காட்டும் பாரு புள்ள
சிந்திச்சு பாத்து
சொந்தத்த சேத்து
பெத்துக்க வேணும் முத்துப் புள்ள
நீரா நில்லாது
நேரம் செல்லாது
சேரு எப்போதும் வீட்டுக்குள்ள
பாலும் நல்லால்ல
பழமும் நல்லால்ல
பசிக்கும் வேறேதோ ஏக்கத்துல
அடி பரிமாறு மச்சானப் பாத்து
பாய் போட்ட கூட்டுக்குள்ள

அடி கானக்கருங்குயிலே
கச்சேரி வைக்கப் போறேன்
உன்ன கணக்காக சேர்த்துவச்சு
கைராசி பாக்கப்போறேன்
இனி மனசெல்லாம் மத்தாப்பூ போல
மலராக தூவும் அம்மா
இனி வருங்காலம் துன்பங்கள் நீங்கி
மலர்மாலை போடும் அம்மா



பாசம் அன்போட
பழகும் பண்போட
நாளும் நீ எந்தன் நெஞ்சுக்குள்ள
காதல் கல்யாணம்
கலந்த பின்னால
கண்ணே இனி உந்தன் கண்ணுக்குள்ள
சந்தனம் போல குங்குமம் போல
சங்கமம் ஆகும் ராசாக்கண்ணு
வந்தது வேள தந்தது மாலை
கேட்டது யாரு சின்னப் பொண்ணு
இனிமே ரெண்டல்ல
இதயம் ஒன்னாச்சு
இரவும் பகலெல்லாம்
இன்பம் உண்டு
நெனச்சா நெஞ்செல்லாம்
நெறஞ்சு கொண்டாடும் 
நெதமும் சுகமுண்டு சொர்க்கமுண்டு
ஒரு இலை போட்டு போடாத சோறு
எடுக்கும் உன் நேரம் இன்று

அடி கானக்கருங்குயிலே
கச்சேரி வைக்கப் போறேன்
உன்ன கணக்காக சேர்த்துவச்சு
கைராசி பாக்கப்போறேன்
இனி மனசெல்லாம் மத்தாப்பூ போல
மலராக தூவும் அம்மா
இனி வருங்காலம் துன்பங்கள் நீங்கி
மலர்மாலை போடும் அம்மா

அடி கானக்கருங்குயிலே
கச்சேரி வைக்கப் போறேன்
உன்ன கணக்காக சேர்த்துவச்சு
கைராசி பாக்கப்போறேன்

No comments:

Post a Comment