கோடி மலர் கொட்டிய அழகு
இன்றெந்தன் கை சேர்ந்ததே
சின்ன அழகு சித்திரை அழகு
சிறு நெஞ்சை கொத்திய அழகு
இன்றெந்தன் தோள் சாய்ந்ததே
எந்தன் உள்ளங்கையில்
அவள் உயிரை வைத்தாள்
ஒரே சொல்லில்
மனசை தைத்தாள்
சுட்டுவிழி பார்வையில்
சுகம் வைத்தாள்
நான் காதலின் கடலில் விழுந்துவிட்டேன்
நீ கரம் ஒன்று கொடுத்தாய் எழுந்துவிட்டேன்
என்ன அழகு எத்தனை அழகு
கோடி மலர் கொட்டிய அழகு
இன்றெந்தன் கை சேர்ந்ததே
அன்பே உன் ஒற்றைப் பார்வை
அதைத் தானே யாசித்தேன்
கிடையாதென்றால் கிளியே
என் உயிர் போக யோசித்தேன்
நான்காண்டு தூக்கம் கெட்டு
இன்றுன்னை சந்தித்தேன்
காற்றும் கடலும் நிலமும்
அடி தீக்கூடத் தித்தித்தேன்
மாணிக்கத் தேரே
உனை மலர் கொண்டு பூசித்தேன்
என்னை நான் கிள்ளி
இது நிஜம் தானா சோதித்தேன்
இது போதுமே இது போதுமே
இனி என் கால்கள் வான் போகுமே
என்ன அழகு எத்தனை அழகு
கோடி மலர் கொட்டிய அழகு
இன்றெந்தன் கை சேர்ந்ததே
நான் கொண்ட ஆசை எல்லாம்
நான்காண்டு ஆசை தான்
உறங்கும் போதும் ஒலிக்கும்
அடி உன் கொலுசின் ஓசை தான்
நீ வீசும் பார்வை இல்லை
நெருப்பாச்சு நெஞ்சம் தான்
வலியின் கொடுமை முடிய
அடி தமிழ் வார்த்தை கொஞ்சம் தான்
இன்றே தான் பெண்ணே
உன் முழுப்பார்வை நான் கண்டேன்
கை தொட்ட நேரம்
என் முதல் மோட்சம் நான்
மகராணியே மலர்வாணியே
இனி என் ஆவி உன் ஆவியே
என்ன அழகு எத்தனை அழகு
கோடி மலர் கொட்டிய அழகு
இன்றெந்தன் கை சேர்ந்ததே
சின்ன அழகு சித்திரை அழகு
சிறு நெஞ்சை கொத்திய அழகு
இன்றெந்தன் தோள் சாய்ந்ததே
எந்தன் உள்ளங்கையில்
அவள் உயிரை வைத்தாள்
ஒரே சொல்லில்
மனசை தைத்தாள்
சுட்டுவிழி பார்வையில்
சுகம் வைத்தாள்
நான் காதலின் கடலில் விழுந்துவிட்டேன்
நீ கரம் ஒன்று கொடுத்தாய் எழுந்துவிட்டேன்
என்ன அழகு எத்தனை அழகு
கோடி மலர் கொட்டிய அழகு
இன்றெந்தன் கை சேர்ந்ததே
No comments:
Post a Comment