ஏன் பெண்ணென்று பிறந்தாய் - Yen Pennendru Piranthai Lyrics

ஏன் பெண்ணென்று பிறந்தாய்
ஏன் என் கண்ணில் விழுந்தாய்
ஏன் ஒரு பாதி சிரித்தாய்
என் உயிர்ப்பூவை எரித்தாய்
முதல் நாள் பார்த்தாய்
உறக்கம் கெடுத்தாய்
முறையா என்றேன்
கண்கள் பறித்தாய்
என் வலி தீர ஒரு வலி என்ன
என் பனிப்பூவே மீண்டும்
பார்த்தாலென்ன

ஏன் பெண்ணென்று பிறந்தாய்
ஏன் என் கண்ணில் விழுந்தாய்



நீ சூடும் ஒரு பூ தந்தால்
என் ஆஸ்தியெல்லாம் கொடுப்பேன்
உன் வாயால் என் பேர் சொன்னால்
உன் காலடியில் கிடப்பேன்
தூக்கத்தைத் தொலைத்தேனே
துடிக்குது நெஞ்சம்
தலை போன சேவல் போல்
தவிக்குது அங்கம்
இரண்டில் ஒன்று சொல்லிவிடு
இல்லை நீயே கொள்ளியிடு

ஏன் பெண்ணென்று பிறந்தாய்
ஏன் என் கண்ணில் விழுந்தாய்



நோகாமல் பிறர் காணாமல்
உந்தன் ஆடை நுனி தொடுவேன்
என்ன ஆனாலும் உயிர் போனாலும்
ஒரு தென்றல் என்றே வருவேன்
நீ என்னைப் பார்த்தால் தான்
துடிக்குது உள்ளம்
நீ எம்மைப் பிரிந்தாலோ
உள்ளம் வெறும் பள்ளம்
இமயம் கேட்கும் என் துடிப்பு
ஏனோ உனக்குள் கதவடைப்பு

ஏன் பெண்ணென்று பிறந்தாய்
ஏன் என் கண்ணில் விழுந்தாய்
ஏன் ஒரு பாதி சிரித்தாய்
என் உயிர்ப்பூவை எரித்தாய்
முதல் நாள் பார்த்தாய்
உறக்கம் கெடுத்தாய்
முறையா என்றேன்
கண்கள் பறித்தாய்
என் வலி தீர ஒரு வலி என்ன
என் பனிப்பூவே மீண்டும்
பார்த்தாலென்ன

ஏன் பெண்ணென்று பிறந்தாய்
ஏன் என் கண்ணில் விழுந்தாய்

No comments:

Post a Comment