உன்ன நெஞ்சில் வச்சுக் கிட்டேன்
ஒத்தையா நீ நானும் பேசிக்கவே முடியலனு
மனசுக்குள்ள பேசிக்கிட்டேன்
சுத்தமா நீ நானும் பாத்துக்கவே முடியலனு
கனவுக்குள்ள பாத்துக்கிட்டேன்
ஒரு கோடி புள்ளி வச்சு
நான் போட்ட காதல் கோலம்
ஒரு பாதி முடியும் முன்னே
அழிச்சுருச்சு காலம் காலம்
இன்னொரு சென்மம் நான்
மறுபடி பொறந்து வந்து
உனக்காக காத்திருப்பேன்
அப்பவும் சேராம
இருவரும் பிரியணும்னா
பொறக்காம போயிருவேன்
சாமி கிட்ட சொல்லிப் புட்டேன்
சாமி கிட்ட சொல்லிப் புட்டேன்
தெப்பக்குளத்தில் படிஞ்ச பாசி
கல்லெறிஞ்சா கலையும் கலையும்
நெஞ்சுக்குளத்தில் படிஞ்ச காதல்
எந்த நெருப்பில் எரியும் எரியும்
நீ போன பாத மேல
சருகாக கெடந்தா சுகமா
உன்னோட ஞாபகமெல்லாம்
மனசுக்குள்ள இருக்கும் ரணமா
கட்டுக்காவல் மீறி வர
காதல் நெஞ்சு கெஞ்சுதே
மனசுக்குள்ள பூட்டி மறைச்ச
அப்ப எதுக்கு வெளியில சிரிச்ச
கனவுக்குள்ள ஓடி புடிச்ச
நெசத்துல தான் தயங்கி நடிச்ச
அடி போடி பயந்தாங்கோழி
எதுக்காக ஊமை ஜாடை
நீ இருந்த மனச அள்ளி
எந்த தீயில் நானும் போட
ஒன்ன என்ன கேட்டுக்கிட்டா
காதல் நெஞ்சு தட்டிச்சு
No comments:
Post a Comment