பூஜைக்கேற்ற பூக்கள் ரெண்டு
பறவை அழைத்தது
அதற்கொரு துணையும் கிடைத்தது
சிறகை விரிப்பது வலம் வரத் தான்
வா வா அன்பே பூஜை உண்டு
வா வா அன்பே...
மாலை நேரச் சூரியன்
மேற்கிலிருந்து பார்க்கிறான்
வேலியோரப் பூக்களின்
வசந்த கீதம் கேட்கிறான்
அந்தி வெயில் வேளை தான்
ஆசை பூக்கும் நேரம்
புல்லின் மீது வாடை தான்
பனியை மெல்ல தூவும்
போதும் போதும் தீர்ந்தது வேதனை
வண்ண மானும் தான் சேர்ந்தது நாதனை
விரலைக் கண்டதும் மீட்டச் சொன்னது வீணை
வா வா அன்பே பூஜை உண்டு
பூஜைக்கேற்ற பூக்கள் ரெண்டு
பறவை அழைத்தது
அதற்கொரு துணையும் கிடைத்தது
சிறகை விரிப்பது வலம் வரத் தான்
வா வா அன்பே பூஜை உண்டு
வா வா அன்பே...
நீலம் பூத்த பார்வைகள்
நூறு கடிதம் போட்டது
நீயும் நானும் சேர்ந்திட
நேரம் பொழுது கேட்டது
மலரை வண்டு மொய்த்திட
மாதம் தேதி ஏது
மீனம் மேஷம் பார்ப்பதோ
காதல் தோன்றும் போது
காலை மாலை ஏங்கினேன் ஏங்கினேன்
கையில் நான் உனை வாங்கினேன் வாங்கினேன்
நீயும் நீயல்ல நானும் நானல்ல கண்ணா
வா வா அன்பே பூஜை உண்டு
பூஜைக்கேற்ற பூக்கள் ரெண்டு
பறவை அழைத்தது
அதற்கொரு துணையும் கிடைத்தது
சிறகை விரிப்பது வலம் வரத் தான்
வா வா அன்பே பூஜை உண்டு
வா வா அன்பே...
No comments:
Post a Comment