உன்ன விட்டா எனக்காரு அம்மா
தேடிப் பாத்தேனே காணோம் உன்ன
கண்ணாமூச்சி ஏன் வா நீ வெளியில
தாயே உயிர் பிரிந்தாயே
என்ன தனியே தவிக்கவிட்டாயே
இன்று நீ பாடும் பாட்டுக்கு
நான் தூங்கவேணும்
நான் பாடும் பாட்டுக்கு தாயே
நீ உன் கண்கள் திறந்தாலே போதும்
அம்மா அம்மா நீ எங்க அம்மா
உன்ன விட்டா எனக்காரு அம்மா
நான் தூங்கும் முன்னே நீ தூங்கிபோனாய்
தாயே என் மேல் உனக்கென்ன கோவம்
கண்ணான கண்ணே என் தெய்வப்பெண்ணே
கண்ணில் தூசி நீ ஊத வேண்டும்
ஐயோ ஏன் இந்த சாபம்
எல்லாம் என்றோ நான் செய்த பாவம்
பகலும் இரவாகி பயமானதே அம்மா
விளக்கு உன் துணையின்றி இருளானதே
உயிரின் ஒரு பாதி பறிபோனதே அம்மா
தனிமை நிலையானதே....
அம்மா அம்மா நீ எங்க அம்மா
உன்ன விட்டா எனக்காரு அம்மா
நான் போனபின்னும் நீ வாழ வேண்டும்
எந்தன் மூச்சு உனக்குள்ளும் உண்டு
வானெங்கும் வண்ணம்
பூவெல்லாம் வாசம்
நாம் வாழும் உலகில் தெய்வங்களுண்டு
நீ என் பெருமையின் எல்லை
உந்தன் தந்தை பேர் சொல்லும் பிள்ளை
தூரம் பிரிவில்லை கலங்காதே என் கண்ணே
உலகம் விளையாட உன் கண் முன்னே
காலம் கரைந்தோடும்
உன் வாழ்வில் துணை சேரும்
மீண்டும் நான் உன் பிள்ளை
அம்மா அம்மா நீ எங்க அம்மா
உன்ன விட்டா எனக்காரு அம்மா
எங்கே போனாலும் நானும் வருவேன்
கண்ணாடி பாரு நானும் தெரிவேன்
தாயே உயிர் பிரிந்தாயே
கண்ணே நீயும் என் உயிர் தானே
இன்று நீ பாடும் பாட்டுக்கு
நான் தூங்க வேணும்
நான் பாடும் தாலாட்டு
நீ தூங்க காதோரம் என்றென்றும் கேட்கும்
No comments:
Post a Comment