என் மனசத கேட்டு தான் தவிக்குது
அதில் என்ன வச்சு பாட மாட்டியா
நெஞ்ச தொட்டு ஆளும் ராசய்யா
மனசு முழுதும் இசை தான் உனக்கு
அதிலே எனக்கோர் இடம் நீ ஒதுக்கு
உன் மனசில பாட்டு தான் இருக்குது
என் மனசத கேட்டு தான் தவிக்குது
பாட்டால புள்ளி வச்சு
பார்வையில கிள்ளி வச்சு
பூத்திருந்த என்னச் சேர்ந்த தேவனே
போடாத சங்கதி தான்
போட ஒரு மேடை உண்டு
நாளு வச்சு சேர வாங்க ராசனே
நெஞ்சோடு கூடு கட்டி
நீங்க வந்து வாழனும்
நில்லாம பாட்டுச் சொல்லி
காலமெல்லாம் ஆளனும்
சொக்கத் தங்கம் உங்களத்தான்
சொக்கி சொக்கி பாத்து
தத்தளிச்சேன் நித்தம் நித்தம்
நான் பூத்து
உன் மனசில பாட்டு தான் இருக்குது
என் மனசத கேட்டு தான் தவிக்குது
நீ பாடும் ராகம் வந்து
நிம்மதிய தந்ததய்யா
நேத்து வரை நெஞ்சில் ஆச தோணல
பூவான பாட்டு இந்த
பொண்ணத் தொட்டு போனதய்யா
போன வழி பாத்து கண்ணு மூடல
உன்னோட வாழ்ந்திருந்தா
ஊருக்கெல்லாம் ராணி நான்
என்னோட ஆசையெல்லாம்
ஏத்துக்கனும் நீங்க தான்
உங்களத்தான் எண்ணி எண்ணி
என்னுசிரு வாழும்
சொல்லுமய்யா நல்ல சொல்லு
சொன்னா போதும்
என் மனசில பாட்டு தான் இருக்குது
உன் மனசத கேட்டு தான் தவிக்குது
நான் உன்ன மட்டும் பாடும் குயிலு தான்
நீ என்ன எண்ணி வாழும் மயிலு தான்
மனசு முழுதும் இசை தான் எனக்கு
இசையோடொனக்கு இடமும் இருக்கு
என் மனசில பாட்டு தான் இருக்குது
உன் மனசத கேட்டு தான் தவிக்குது
No comments:
Post a Comment