நீ இல்லாமல் வாழ்வது லேசா
லேசா லேசா
நீ இல்லாமல் வாழ்வது லேசா
லேசா லேசா
நீண்டகால உறவிது லேசா
காதல் தேவன் கோயில் தேடி
வருகிறதே விரைவினிலே
கலர் கலர் கனவுகள் விழிகளிலே
உனக்கெனவே உலகினிலே பிறந்தவளே...
நான் தூங்கி நாளாச்சு
நாளெல்லாம் பாழாச்சு
கொல்லாமல் என்னை கொன்று வதைக்கிறதே
சொல்லாமல் என்னை சிதைக்கிறதே
கண்ணெல்லாம் கண்ணன் வண்ணம்
தெரிகிறதே விரிகிறதே
தனிமையில் இருக்கையில் எரிகிறதே
பனி இரவும் அனல் மழையை பொழிகிறதே
லேசா லேசா
நீ இல்லாமல் வாழ்வது லேசா
லேசா லேசா
நீண்டகால உறவிது
உறவிது உறவிது உறவிது....
வெவ்வேறு பேரோடு
வாழ்ந்தாலும் வேறல்ல
நான் வாங்கும் மூச்சுக் காற்று உனதல்லவா
உன் தேகம் ஓடும் ரத்தம் எனதல்லவா
நீ என்றால் நான் தான் என்று
உறவறிய ஊரறிய
ஒருவரில் ஒருவரின் உயிர் கரைய
உடனடியாய் உதடுகளால் உயிலெழுது
லேசா லேசா
நீ இல்லாமல் வாழ்வது லேசா
லேசா லேசா
நீண்டகால உறவிது லேசா
உனக்கெனவே உலகினிலே பிறந்தவளே...
உனக்கெனவே உலகினிலே பிறந்தவளே...
No comments:
Post a Comment