காதோரம் லோலாக்கு கதை சொல்லுதய்யா - Kaathoram Lolaakku Kathai Solluthayya Lyrics

காதோரம் லோலாக்கு
கதை சொல்லுதய்யா
காத்தாடும் மேலாக்கு
உனை பின்னுதய்யா
காதோரம் லோலாக்கு
கதை சொல்லுதடி
காத்தாடும் மேலாக்கு
எனை பின்னுதடி
உன் முகத்த பாக்கையில
என் முகத்த நான் மறந்தேன்

காதோரம் லோலாக்கு
கதை சொல்லுதடி
காதோரம் லோலாக்கு



நான் விரும்பும் மாப்பிள்ளக்கு
நாள் கணக்கா காத்திருந்தேன்
நான் விரும்பும் மாப்பிள்ளக்கு
நாள் கணக்கா காத்திருந்தேன்
வந்தாயே நீயோ வாசலத்தேடி
கண்டேனே நானும் எனக்கொரு ஜோடி
உன்னாட்டந்தான் தங்கத்தேரு
கண்டதில்ல எங்க ஊரு
காதல் போதை தந்த கள்ளி
கந்தன் தேடி வந்த வள்ளி
நீ தொடத் தானே நான் பொறந்தேன்
நாளொரு வண்ணம் நான் வளர்ந்தேன்

காதோரம் லோலாக்கு
கதை சொல்லுதடி
காத்தாடும் மேலாக்கு
எனை பின்னுதடி
காதோரம் லோலாக்கு
கதை சொல்லுதய்யா
காதோரம் லோலாக்கு



வானவில்ல விலை கொடுத்து
வாங்கிடத்தான் காசிருக்கு
வானவில்ல விலை கொடுத்து
வாங்கிடத்தான் காசிருக்கு
என் கூட உன் போல் ஓவியப்பாவை
இல்லாமல் போனால் நான் ஒரு ஏழை
எந்நாளும் நான் உந்தன் சொத்து
இஷ்டம் போல அள்ளிக் கட்டு
மேலும் கீழும் மெல்லத் தொட்டு
மேளம் போல என்னத் தட்டு
நான் அதுக்காக காத்திருந்தேன்
நீ வரும் பாத பாத்திருந்தேன்

காதோரம் லோலாக்கு
கதை சொல்லுதய்யா
காத்தாடும் மேலாக்கு
உனை பின்னுதய்யா
உன் முகத்த பாக்கையில
என் முகத்த நான் மறந்தேன்
காதோரம் லோலாக்கு
கதை சொல்லுதய்யா
காத்தாடும் மேலாக்கு
உனை பின்னுதய்யா
காதோரம் லோலாக்கு
கதை சொல்லுதடி
காத்தாடும் மேலாக்கு
எனை பின்னுதடி

No comments:

Post a Comment