மின்னலே நீ வந்ததேனடி என் கண்ணிலே - Minnale Nee Vanthathenadi En Kannile Lyrics

மின்னலே நீ வந்ததேனடி
என் கண்ணிலே ஒரு காயம் என்னடி
என் வானிலே 
நீ மறைந்து போன மாயம் என்னடி
சில நாளிகை நீ வந்து போனது
என் மாளிகை அது வெந்து போனது
மின்னலே என் வானம் உன்னை தேடுதே

மின்னலே நீ வந்ததேனடி
என் கண்ணிலே ஒரு காயம் என்னடி
என் வானிலே 
நீ மறைந்து போன மாயம் என்னடி
சில நாளிகை நீ வந்து போனது
என் மாளிகை அது வெந்து போனது
மின்னலே என் வானம் உன்னை தேடுதே



கண் விழித்து பார்த்தபோது
கலைந்த வண்ணமே
உன் கை ரேகை ஒன்று மட்டும்
நினைவு சின்னமே
கண் விழித்து பார்த்தபோது
கலைந்த வண்ணமே
உன் கை ரேகை ஒன்று மட்டும்
நினைவு சின்னமே
கதறி கதறி எனது உள்ளம்
உடைந்து போனதே
இன்று சிதறி போன சில்லில்
எல்லாம் உனது பிம்பமே
கண்ணீரில் தீ வளர்த்து
காத்திருக்கிறேன்
உன் காலடித் தடத்தில் நான்
பூத்திருக்கிறேன்

மின்னலே நீ வந்ததேனடி
என் கண்ணிலே ஒரு காயம் என்னடி
என் வானிலே 
நீ மறைந்து போன மாயம் என்னடி
சில நாளிகை நீ வந்து போனது
என் மாளிகை அது வெந்து போனது
மின்னலே என் வானம் உன்னை தேடுதே



பால் மழைக்கு காத்திருக்கும்
பூமியில்லையா
ஓரு பண்டிகைக்கு காத்திருக்கும்
சாமியில்லையா
பால் மழைக்கு காத்திருக்கும்
பூமியில்லையா
ஓரு பண்டிகைக்கு காத்திருக்கும்
சாமியில்லையா
வார்த்தை வர காத்திருக்கும்
கவிஞனில்லையா
நான் காத்திருந்தால் காதல்
இன்னும் நீளுமில்லையா
கண்ணீரில் தீ வளர்த்து
காத்திருக்கிறேன்
உன் காலடித் தடத்தில் நான்
பூத்திருக்கிறேன்

மின்னலே நீ வந்ததேனடி
என் கண்ணிலே ஒரு காயம் என்னடி
என் வானிலே 
நீ மறைந்து போன மாயம் என்னடி
சில நாளிகை நீ வந்து போனது
என் மாளிகை அது வெந்து போனது
மின்னலே என் வானம் உன்னை தேடுதே

No comments:

Post a Comment