கொஞ்சி கொஞ்சி பேசி வரும் - Konji Konji Pesi Varum Lyrics

கொஞ்சி கொஞ்சி பேசி வரும் தமிழ் போல
அஞ்சி அஞ்சி வீசிவரும் அலை போல
நெஞ்சில் என்றும் தங்கும் சந்தக்கவி போல
நூறு ஜென்மம் சேர்ந்திருக்க வாழ்த்துகிறோம்
பூத்தூவுகிறோம்

கொஞ்சி கொஞ்சி பேசி வரும் தமிழ் போல
அஞ்சி அஞ்சி வீசிவரும் அலை போல
நெஞ்சில் என்றும் தங்கும் சந்தக்கவி போல
நூறு ஜென்மம் சேர்ந்திருக்க வாழ்த்துகிறோம்
பூத்தூவுகிறோம்


இரண்டு வரிகளில் திருக்குறள் இருந்திட
காரணம் இருக்கிறதே
கணவன் ஒரு வரி மனைவி ஒரு வரி
அர்த்தம் கிடைக்கிறதே
யார் பெரிதென்ற எண்ணங்கள் வேண்டாம்
சிந்தித்து பாருங்களே
சரிசமமாய் உள்ள தூண்களில் தானே
நிற்கும் கோபுரங்கள்
சந்தேகம் தான் தீயை வைக்கும்
நம்பிக்கை தான் தீபம் வைக்கும்
இந்த விண்ணும் மண்ணும் உள்ள நாள் வாழ்க

கொஞ்சி கொஞ்சி பேசி வரும் தமிழ் போல
அஞ்சி அஞ்சி வீசிவரும் அலை போல
நெஞ்சில் என்றும் தங்கும் சந்தக்கவி போல
நூறு ஜென்மம் சேர்ந்திருக்க வாழ்த்துகிறோம்
பூத்தூவுகிறோம்


அவரவர் எண்ணம் அவரவர்க்குண்டு
ஆதிக்கம் வேண்டாமே
ஒரு தனிப்பட்ட சுதந்திரம் இருவருக்கிடையில்
அவசியம் இருக்கட்டுமே
ஒருவருக்கொருவர் பாசம் தந்து
நண்பர்கள் ஆகுங்கள்
ஒவ்வொரு நாளும் ஒருமுறையேனும்
ஒன்றாய் உண்ணுங்கள்
கொஞ்சம் நீங்கள் விட்டுத் தந்தால்
சொர்க்கம் உங்கள் வீட்டைத் தட்டும்
காலம் எல்லாம் உங்கள் நெஞ்சில் பூப்பூக்கும்

கொஞ்சி கொஞ்சி பேசி வரும் தமிழ் போல
அஞ்சி அஞ்சி வீசிவரும் அலை போல
நெஞ்சில் என்றும் தங்கும் சந்தக்கவி போல
நூறு ஜென்மம் சேர்ந்திருக்க வாழ்த்துகிறோம்
பூத்தூவுகிறோம்

பூவே செம்பூவே உன் வாசம் - Poove Sempoove Un Vaasam Lyrics

பூவே செம்பூவே உன் வாசம் வரும்
வாசல் என் வாசல் உன் பூங்காவனம்
வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீ தான் ஒரு பூவின் மடல்

பூவே செம்பூவே உன் வாசம் வரும்
பூவே செம்பூவே


நிழல் போல நானும்.. ஆ.. ஆ....
நிழல் போல நானும் நடைபோட நீயும்
தொடர்கின்ற சொந்தம் நெடுங்கால பந்தம்
கடல் வானம் கூட நிறம் மாறக்கூடும்
மனம் கொண்ட பாசம் தடம் மாறிடாது
நான் வாழும் வாழ்வே உனக்காகத்தானே
நாள்தோறும் நெஞ்சில் நான் ஏந்தும் தேனே
எந்நாளும் சங்கீதம் சந்தோசமே

வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீ தான் ஒரு பூவின் மடல்

பூவே செம்பூவே உன் வாசம் வரும்
வாசல் என் வாசல் உன் பூங்காவனம்
வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீ தான் ஒரு பூவின் மடல்

பூவே செம்பூவே உன் வாசம் வரும்
பூவே செம்பூவே


உனைபோல நானும் ஒரு பிள்ளை தானே
பலர்வந்து கொஞ்சும் கிளிப்பிள்ளை நானே
உனைபோல நானும் மலர்சூடும் பெண்மை
விதி என்னும் நூலில் விளையாடும் பொம்மை
நான் செய்த பாவம் என்னோடு போகும்
நீ வாழ்ந்து நான் தான் பார்த்தாலே போதும்
இந்நாளும் எந்நாளும் உல்லாசமே

வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீ தான் ஒரு பூவின் மடல்

பூவே செம்பூவே உன் வாசம் வரும்
வாசல் என் வாசல் உன் பூங்காவனம்
வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீ தான் ஒரு பூவின் மடல்

பூவே செம்பூவே உன் வாசம் வரும்
பூவே செம்பூவே

உன் கண்ணில் நீர் வழிந்தால் - Un Kannil Neer Valinthal Lyrics

உன் கண்ணில் நீர் வழிந்தால்
என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி
உன் கண்ணில் நீர் வழிந்தால்
என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி
என் கண்ணில் பாவையன்றோ
கண்ணம்மா என் உயிர் நின்னதன்றோ

உன் கண்ணில் நீர் வழிந்தால்
என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி

உன்னை கரம் பிடித்தேன்
வாழ்க்கை ஒளிமயமானதடி
உன்னை கரம் பிடித்தேன்
வாழ்க்கை ஒளிமயமானதடி
பொன்னை மணந்ததனால்
சபையில் புகழும் வளர்ந்ததடி...

உன் கண்ணில் நீர் வழிந்தால்
என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி


காலச் சுமைதாங்கி போலே
மார்பில் எனை தாங்கி
வீழும் கண்ணீர் துடைப்பாய்
அதில் என் விம்மல் தணியுமடி
ஆலம் விழுதுகள் போல்
உறவு ஆயிரம் வந்துமென்ன
ஆலம் விழுதுகள் போல்
உறவு ஆயிரம் வந்துமென்ன
வேரென நீ இருந்தாய்
அதில் நான் வீழ்ந்துவிடாதிருந்தேன்

உன் கண்ணில் நீர் வழிந்தால்
என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி


முள்ளில் படுக்கையிட்டு
இமையை மூடவிடாதிருக்கும்
பிள்ளை குலமடியோ
என்னை பேதமை செய்ததடி
பேருக்கு பிள்ளை உண்டு
பேசும் பேச்சுக்கு சொந்தம் உண்டு
பேருக்கு பிள்ளை உண்டு
பேசும் பேச்சுக்கு சொந்தம் உண்டு
என் தேவையை யார் அறிவார்
என் தேவையை யார் அறிவார்
உன்னைப்போல் தெய்வம் ஒன்றே அறியும்

உன் கண்ணில் நீர் வழிந்தால்
என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி
என் கண்ணில் பாவையன்றோ
கண்ணம்மா என் உயிர் நின்னதன்றோ

உன் கண்ணில் நீர் வழிந்தால்
என் நெஞ்சில்.....

வரச்சொல்லி இந்நேரம் - புதுச்சேரி கச்சேரி - Puduchery Kacheri Sad Lyrics

வரச்சொல்லி இந்நேரம் 
வனக்குயில் அழைத்தது வந்தேன்
குறை சொல்லி இப்போது 
விரட்டிட தெருவினில் நின்றேன்
அழுகையை கண்ணோடு
அடக்கிட நினைக்கையில் நானும்
எனக்கென கண்ணீரை 
வடிக்குது வடிக்குது வானம்

உனை நினைத்து உயிர் துடித்து
தினம் தினம் நான் இசை படித்தேன்
உனதழகை விழியிரண்டால்
அழகழகாய் சிலை வடித்தேன்


கலங்கம் இல்லாத காதல்
பிழைகள் இல்லாத பாடல்
இடையில் உண்டான ஊடல்
நிஜங்கள் ஆகாது கானல்

வார்த்தை பொய்யாகும் வாழ்க்கை பொய்யாகும்
காதல் பொய்யாவதேது

புதுச்சேரி கச்சேரி எக்கச்சக்க பார்ட்டி ஒன்னு புடிச்சேன்
புது டைகர் ஆச்சாரி வரதாச்சாரி போல படிச்சேன்
புதுச்சேரி கச்சேரி எக்கச்சக்க பார்ட்டி ஒன்னு புடிச்சேன்
புது டைகர் ஆச்சாரி வரதாச்சாரி போல படிச்சேன்
பம்சிக்கு பம்சிக்கு பம்ச பம்பம்பம்
பம்சிக்கு பம்சிக்கு பம்சபம்

இதயமே இதயமே - Ithayame Ithayame Lyrics

இதயமே இதயமே
உன் மௌனம் என்னைக் கொல்லுதே 
இதயமே இதயமே

இவ்விரகம் என்னை வாட்டுதே
நிலவில்லாத நீலவானம் போலவே
உயிரில்லாமல் எனது காதல் ஆனதே

இதயமே இதயமே
உன் மௌனம் என்னைக் கொல்லுதே 
இதயமே இதயமே


பனியாக உருகி நதியாக மாறி
அலைவீசி விளையாடி இருந்தேன்
தனியாக இருந்தும் உன் நினைவோடு வாழ்ந்து
உயிர்க்காதல் உறவாடி கலந்தே நின்றேன்
இது எந்தன் வாழ்வில் நீ போட்ட கோலம்
இது எந்தன் வாழ்வில் நீ போட்ட கோலம்
கோலம் கலைந்ததே புது சோகம் பிறந்ததே
நீ இல்லாத வாழ்வு இங்கு கானல் தான்

இதயமே இதயமே
உன் மௌனம் என்னைக் கொல்லுதே 
இதயமே இதயமே


என் ஜீவராகம் கலந்தாடும் காற்று
உன்மீது படவில்லை துடித்தேன்
அரங்கேறும் பாடல் உலகெங்கும் கேட்டும்
உன் நெஞ்சை தொடவில்லை ஏன் சொல்லம்மா
இசைக்கின்ற கலைஞன் நானாகிப் போனேன்
இசைக்கின்ற கலைஞன் நானாகிப் போனேன்
ஜீவன் நீயம்மா என் பாடல் நீயம்மா
நீ இல்லாத வாழ்வு இங்கு கானல் தான்

இதயமே இதயமே
உன் மௌனம் என்னைக் கொல்லுதே 
இதயமே இதயமே

பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - Pottu Vaitha Oru Vatta Nila Lyrics

பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா
குளிர் புன்னகையில் எனை தொட்ட நிலா

பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா
குளிர் புன்னகையில் எனை தொட்ட நிலா
என் மனதில் அம்பு விட்ட நிலா
இது எட்ட நின்று எனை சுட்ட நிலா
வாழ்நாள் தோறும் தினம் தான் காதோரம்
பாடல் கூறும்

பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா
குளிர் புன்னகையில் எனை தொட்ட நிலா
என் மனதில் அம்பு விட்ட நிலா
இது எட்ட நின்று எனை சுட்ட நிலா


ஆறாத ஆசைகள் தோன்றும் எனை தூண்டும்
ஆனாலும் வாய்பேச அஞ்சும் இந்த நெஞ்சம்
அவள் பேரை நாளும் அசை போடும் உள்ளம்
அவள் போகும் பாதை நிழல் போல செல்லும்
மௌனம் பாதி மோகம் பாதி
என்னை கொல்லும் எந்நாளும்

பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா
குளிர் புன்னகையில் எனை தொட்ட நிலா
என் மனதில் அம்பு விட்ட நிலா
இது எட்ட நின்று எனை சுட்ட நிலா
வாழ்நாள் தோறும் தினம் தான் காதோரம்
பாடல் கூறும்

பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா
குளிர் புன்னகையில் எனை தொட்ட நிலா
என் மனதில் அம்பு விட்ட நிலா
இது எட்ட நின்று எனை சுட்ட நிலா


யாப்போடு சேராதோ பாட்டு தமிழ் பாட்டு
தோப்போடு சேராதோ காற்று பனிக்காற்று
வினாத்தாள் போல் இங்கே கனாக்காணும் காளை
விடை போலே அங்கே நடைபோடும் பாவை
ஒன்றாய்க் கூடும் ஒன்றாய்ப் பாடும்
பொன்னாள் இங்கு எந்நாளோ

பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா
குளிர் புன்னகையில் எனை தொட்ட நிலா
என் மனதில் அம்பு விட்ட நிலா
இது எட்ட நின்று எனை சுட்ட நிலா
வாழ்நாள் தோறும் தினம் தான் காதோரம்
பாடல் கூறும்

பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா
குளிர் புன்னகையில் எனை தொட்ட நிலா
என் மனதில் அம்பு விட்ட நிலா
இது எட்ட நின்று எனை சுட்ட நிலா

ஈரமான ரோஜாவே என்னைப் பார்த்து - Eeramaana Rojave Ennai Paarthu Lyrics

ஈரமான ரோஜாவே என்னைப் பார்த்து மூடாதே

ஈரமான ரோஜாவே என்னைப் பார்த்து மூடாதே
கண்ணில் என்ன சோகம் போதும் ஏங்காதே
என் அன்பே ஏங்காதே

ஈரமான ரோஜாவே என்னைப் பார்த்து மூடாதே
கண்ணில் என்ன சோகம் போதும் ஏங்காதே
என் அன்பே ஏங்காதே


என்னைப் பார்த்து ஒரு மேகம்
ஜன்னல் சாத்திவிட்டு போகும்
என்னைப் பார்த்து ஒரு மேகம்
ஜன்னல் சாத்திவிட்டு போகும்
உன் வாசலில் எனை கோலம் இடு
இல்லை என்றால் ஒரு சாபம் இடு
பொன்னாரமே.. ஏ.. ஏ..
கண்ணீரில் மூழ்காது காற்றுள்ள பந்து
என்னோடு நீ பாடி வா சிந்து

ஈரமான ரோஜாவே என்னைப் பார்த்து மூடாதே
கண்ணில் என்ன சோகம் போதும் ஏங்காதே
என் அன்பே ஏங்காதே


நேரம் கூடிவந்த வேளை
நீ நெஞ்சை மூடி வைத்த கோழை
நேரம் கூடிவந்த வேளை
நீ நெஞ்சை மூடி வைத்த கோழை
என் நெஞ்சிலே இனி ரத்தம் இல்லை
கண்ணீருக்கே நான் தத்துப்பிள்ளை
என் காதலி.. இ...இ...
உன் போல என் ஆசை தூங்காது ராணி
கண்ணீரில் தள்ளாடுதே தோணி

ஈரமான ரோஜாவே ஏக்கம் என்ன ராஜாவே
கண்ணில் என்ன சோகம் தீரும் ஏங்காதே
என் அன்பே ஏங்காதே
ஏங்காதே என் அன்பே ஏங்காதே

துள்ளித் துள்ளிப் போகும் பெண்ணே - Thulli Thulli Pogum Penne Lyrics

துள்ளித் துள்ளிப் போகும் பெண்ணே
சொல்லிக் கொண்டு போனால் என்ன
கன்னி உந்தன் பேரென்ன
வெள்ளிக் கொலுசு போகும் திசையில்
பாவி நெஞ்சு போவதென்ன

துள்ளித் துள்ளிப் போகும் பெண்ணே
சொல்லிக் கொண்டு போனால் என்ன
கன்னி உந்தன் பேரென்ன
வெள்ளிக் கொலுசு போகும் திசையில்
பாவி நெஞ்சு போவதென்ன

துள்ளித் துள்ளிப் போகும் பெண்ணே
சொல்லிக் கொண்டு போனால் என்ன
ஓ.. ஓ...


பூமி என்னும் பெண்ணும் பொட்டு வைத்துக் கொண்டு
பச்சை ஆடை கட்டிப் பார்த்தாள்
கோடைப் பெண் நாணம் கொண்டு
ஏன் வளைந்து போகிறாள்

பூமி என்னும் பெண்ணும் பொட்டு வைத்துக் கொண்டு
பச்சை ஆடை கட்டிப் பார்த்தாள்
கோடைப் பெண் நாணம் கொண்டு
ஏன் வளைந்து போகிறாள்
பூமிப்பெண்ணுக்கும் கன்னிப் பெண்ணைப் போல்
நெஞ்சில் ஈரம் உண்டு

துள்ளித் துள்ளிப் போகும் பெண்ணே
சொல்லிக் கொண்டு போனால் என்ன
ஓ.. ஓ...


அந்தி வெளிச்சம் முந்தி விரித்து
பந்தி இங்கு வைக்கும் நேரம்
பூச்சிந்தும் பூமியெல்லாம் நான் வணங்கும் காதலி

அந்தி வெளிச்சம் முந்தி விரித்து
பந்தி இங்கு வைக்கும் நேரம்
பூச்சிந்தும் பூமியெல்லாம் நான் வணங்கும் காதலி
மண்டியிட்டு நான் முத்தம் தரவா
தென்றல் பெண்ணே வா வா வா

துள்ளித் துள்ளிப் போகும் பெண்ணே
சொல்லிக் கொண்டு போனால் என்ன
கன்னி உந்தன் பேரென்ன
வெள்ளிக் கொலுசு போகும் திசையில்
பாவி நெஞ்சு போவதென்ன

துள்ளித் துள்ளிப் போகும் பெண்ணே
சொல்லிக் கொண்டு போனால் என்ன
ஓ.. ஓ...
ஓ.. ஓ...

ஏத்தமய்யா ஏத்தம் ஏலோலங்கடி - Yethamayya Yetham Lyrics

முந்தி முந்தி விநாயகரே.. ஏய்
முப்பத்து முக்கோடி தேவர்களே.. ஏய்
நீர் கொடுத்த நீரையெல்லாம்
நீர் கொடுத்த நெலத்துக்கே பாச்ச போறேன்
சீராக ஏரோட்டி பார் முழுக்க 
சோறு கொடுத்து காக்க போறேன்
ஆதரிக்க வேணுமய்யா...

ஏத்தமய்யா ஏத்தம் ஏலோலங்கடி
ஏத்தமய்யா ஏத்தம்
ஏத்தமய்யா ஏத்தம் ஏலோலங்கடி
ஏத்தமய்யா ஏத்தம்

எங்கப்பன் உன் பாட்டன் முப்பாட்டன் சொத்து இது
ஏத்தமய்யா ஏத்தம் ஏலோலங்கடி
ஏத்தமய்யா ஏத்தம்
ஏலோலங்கடி ஏத்தமய்யா ஏத்தம்

ஏலோலங்கடி ஏத்தமய்யா ஏத்தம்
ஒனக்கு ரொம்ப ஏத்தமய்யா ஏத்தம்
ஏத்தமய்யா ஏத்தம்
ஒனக்கு ரொம்ப ஏத்தமய்யா ஏத்தம்


கோவணத்தில் ஒரு காசிருந்தா
கோழி கூவ ஒரு பாட்டு வரும்
பாட்டு படிக்கிற என் மாமா
உன் கோவணத்தில் ஒரு காசிருக்கா

கோவணத்தில் ஒரு காசிருந்தா
கோழி கூவ ஒரு பாட்டு வரும்
பாட்டு படிக்கிற என் மாமா
உன் கோவணத்தில் ஒரு காசிருக்கா

கோவணமும் இல்ல கையில் காசும் இல்ல
பாட்டு வருதே என்ன புள்ள
கோயில் சிலை போல உன்னக் கண்டாதான்
ஏத்தம் கெடுதே கன்னிப் புள்ள

சேலையப் பாத்தாலே சொக்கிப்போகிற என் மாமா
வேலயப் பார் மாமா அந்த வெட்டிப் பேச்சு ஏம்மா
காஞ்ச வயலில தண்ணியப் பாச்சணும்
பஞ்சத்த தீக்கணும் பசிதாகம் போக்கணும்

ஏத்தமய்யா ஏத்தம்
ஒனக்கு ரொம்ப ஏத்தமய்யா ஏத்தம்
ஏத்தமய்யா ஏத்தம்
ஒனக்கு ரொம்ப ஏத்தமய்யா ஏத்தம்


சுவிட்சு ஒன்ன தட்டிவுட்டுப்புட்டா
பம்பு செட்டுல தண்ணி கொட்டிப்புடும்
வச்சு வேல செய்ய வக்கில்லையே
இங்கு வக்கன பேச்சு ஏன் மாமா

சுவிட்சு ஒன்ன தட்டிவுட்டுப்புட்டா
பம்பு செட்டுல தண்ணி கொட்டிப்புடும்
வச்சு வேல செய்ய வக்கில்லையே
இங்கு வக்கன பேச்சு ஏன் மாமா

எந்திரம் வச்சு வேலை செய்யலாம்
நாமென்ன செய்ய பூமியில
மண்ணோட மனுசன் மனசு இணையும்
மகத்துவம் வருமா சொல்லு புள்ள

மண்ணு வெளஞ்சாலே அது வேணாங்குதா மாமா
கையில் பொன்னு நெறஞ்சாலே அது பொல்லாததா மாமா
விஞ்ஞான காலத்தில் எல்லாமே மிஷினு
மனுசன் மனசு கூட மிஷினாச்சு போ புள்ள

ஏத்தமய்யா ஏத்தம்
ஒனக்கு ரொம்ப ஏத்தமய்யா ஏத்தம்
ஏத்தமய்யா ஏத்தம்
ஒனக்கு ரொம்ப ஏத்தமய்யா ஏத்தம்

ஒங்கப்பன் ஒம்பாட்டன் முப்பாட்டன் சொத்திருக்கு
ஏத்தமய்யா ஏத்தம் ஏலோலங்கடி
ஏத்தமய்யா ஏத்தம் ஏலோலங்கடி
ஏத்தமய்யா ஏத்தம்

ஏலோலங்கடி ஏத்தம் ரொம்ப ஏத்தம்
ஒனக்கும் கூட ஏத்தம் ரொம்ப ஏத்தம் 
ஏத்தம் ரொம்ப ஏத்தம்
ஒனக்கும் கூட ஏத்தம் ரொம்ப ஏத்தம்

நீ பொட்டு வச்ச தங்கக்கொடம் - Nee Pottu Vacha Thanga Lyrics

நீ பொட்டு வச்ச தங்கக்கொடம்
ஊருக்கு நீ மகுடம்
நாங்க தொட்டு தொட்டு இழுத்துவரும்
ஜோரான தங்கரதம்

அட நீ தங்கக்கட்டி சிங்கக்குட்டி
தனத்தான் தனத்தான் தனத்தான் தனத்தான்

இனி உன் பேரச்சொல்லும் பட்டிதொட்டி
தனத்தான் தனத்தான் தனத்தான் தனத்தான்

நீ பொட்டு வச்ச தங்கக்கொடம்
ஊருக்கு நீ மகுடம்
நாங்க தொட்டு தொட்டு இழுத்துவரும்
ஜோரான தங்கரதம்


பெத்தவங்க செஞ்ச புண்ணியந்தான்
பிள்ளைகள வந்து சேருமய்யா
உத்தமரு ரொம்ப ஒசந்தவரு
என்ன பெத்தவரு இந்த பெரியவரு
அவரப்போல இங்காருமில்ல
அலசிப்பாரு நீ ஒலகத்துல

அண்ணனுன்னா அண்ணனய்யா
அன்பு உள்ள மன்னனய்யா
அண்ணனுன்னா அண்ணனய்யா
அன்பு உள்ள மன்னனய்யா
ஊரெல்லாம் கொண்டாடும் உன் பேரய்யா

அட நீ தங்கக்கட்டி சிங்கக்குட்டி
தனத்தான் தனத்தான் தனத்தான் தனத்தான்

நீ பொட்டு வச்ச தங்கக்கொடம்
ஊருக்கு நீ மகுடம்
நாங்க தொட்டு தொட்டு இழுத்துவரும்
ஜோரான தங்கரதம்


வெற்றியெல்லாம் உங்க கூட வரும்
நீங்க போற எடம் நல்ல பெருமை பெறும்
சத்தியத்த தெனம் காத்து வரும்
அந்த சாமி தரும் பல நூறு வரம்
மனசு எல்லாமே கோவிலய்யா
அதுல நீதானே சாமியய்யா

நல்லவன் தான் இவன் வல்லவன் தான்
நல்லதெல்லாம் இங்கே சொல்ல வந்தான்
நல்லவன் தான் இவன் வல்லவன் தான்
நல்லதெல்லாம் இங்கே சொல்ல வந்தான்
நாடெல்லாம் நாடெல்லாம் வெல்ல வந்தான்

அட நீ தங்கக்கட்டி சிங்கக்குட்டி
தனத்தான் தனத்தான் தனத்தான் தனத்தான்

நீ பொட்டு வச்ச தங்கக்கொடம்
ஊருக்கு நீ மகுடம்
நாங்க தொட்டு தொட்டு இழுத்துவரும்
ஜோரான தங்கரதம்

அட நீ தங்கக்கட்டி சிங்கக்குட்டி
தனத்தான் தனத்தான் தனத்தான் தனத்தான்

இனி உன் பேரச்சொல்லும் பட்டிதொட்டி
தனத்தான் தனத்தான் தனத்தான் தனத்தான்

தந்தானனா தந்தானனா தந்தான தானனனா
தந்தானனா தந்தானனா தந்தான தானனனா

உன்னை தினம் தேடும் தலைவன் - Unnai Dinam Thedum Thalaivan Lyrics

மாலை கருக்கலிலே மையிருட்டு வேளையிலே
சோலை மலர்களுக்கு சோர்வு என்ன கால்களுக்கு
சோர்வு என்ன கால்களுக்கு...

உன்னை தினம் தேடும் தலைவன்
இன்று கவிபாடும் கலைஞன்
உன்னை தினம் தேடும் தலைவன்
கவிபாடும் கலைஞன்
காவல் வரும்போது கையில் விலங்கேது
கால்கள் நடமாடட்டும்

லலல லல லல்ல லால்லா

பூந்தோட்டம் தாங்காதம்மா
பூப்பறிக்க நாளாகுமா
பூவாடுது தோள் சேருது
கண்ணே கலக்கமா
கண்ணில் மயக்கமா

உன்னை தினம் தேடும் தலைவன்
இன்று கவிபாடும் கலைஞன்
உன்னை தினம் தேடும் தலைவன்
கவிபாடும் கலைஞன்
காவல் வரும்போது கையில் விலங்கேது
கால்கள் நடமாடட்டும்

லலல லல லல்ல லால்லா

ல..ல.. ல.. ல.. ல...


துணிவிருந்தால் பாட முடியும்
துணையிருந்தால் ஆட முடியும்
பாடும் மயிலானது
அரங்கில் துணை தேடுது
தோகை விரித்தாடம்மா
தோளில் சாய்ந்தாடம்மா
தோல்வி எனக்கேதம்மா
கேள்வி இனியேதம்மா

பூந்தோட்டம் தாங்காதம்மா
பூப்பறிக்க நாளாகுமா
பூவாடுது தோள் சேருது
கண்ணே கலக்கமா
கண்ணில் மயக்கமா


அன்றொரு நாள் பிறந்த நிலவு
முழுமதியாய் வளர்ந்த அழகு
இன்று பெண்ணானது
எதிரில் நின்றாடுது
மேகம் பகையானது
நிலவு சிறையானது
மன்னன் துணை வந்ததும்
சிறையும் சுகமானது

பூந்தோட்டம் தாங்காதம்மா
பூப்பறிக்க நாளாகுமா
பூவாடுது தோள் சேருது
கண்ணே கலக்கமா
கண்ணில் மயக்கமா

உன்னை தினம் தேடும் தலைவன்
இன்று கவிபாடும் கலைஞன்
உன்னை தினம் தேடும் தலைவன்
கவிபாடும் கலைஞன்
காவல் வரும்போது கையில் விலங்கேது
கால்கள் நடமாடட்டும்

லலல லல லல்ல லால்லா

பூந்தோட்டம் தாங்காதம்மா
பூப்பறிக்க நாளாகுமா
பூவாடுது தோள் சேருது
கண்ணே கலக்கமா
கண்ணில் மயக்கமா

ல.. ல.. லாலல்லா..
ல.. ல.. லாலல்லா..

சொல்லால் அடிச்ச சுந்தரி - Sollaal Adicha Sundari Lyrics

சொல்லால் அடிச்ச சுந்தரி
மனம் சுட்டுவிட்ட கோலம் என்னடி

சொல்லால் அடிச்ச சுந்தரி
மனம் சுட்டுவிட்ட கோலம் என்னடி
பட்ட காயத்துக்கு மருந்தென்னடி
என் தாயத்தந்த தாயும் நீயடி

என்னதான் சொல்ல
ஒண்ணும் கூட இல்ல
மன்னவன் நெஞ்சிலே மூச்சடைச்சதென்ன

மயங்கினேன் சொல்லத் தயங்கினேன் - Mayanginen Solla Thayanginen Lyrics

ஆ.. ஆ...ஆ...

மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்
உன்னை விரும்பினேன் உயிரே
தினம் தினம் உந்தன் தரிசனம் 
பெறத் தவிக்குதே மனமே
இங்கு நீயில்லாது வாழும் வாழ்வு தான் ஏனோ

மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்
உன்னை விரும்பினேன் உயிரே
தினம் தினம் உந்தன் தரிசனம் 
பெறத் தவிக்குதே மனமே
இங்கு நீயில்லாது வாழும் வாழ்வு தான் ஏனோ

மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்
உன்னை விரும்பினேன் உயிரே
தினம் தினம் உந்தன் தரிசனம் 
பெறத் தவிக்குதே....


உறக்கமில்லாமல் அன்பே நான் ஏங்கும் ஏக்கம் போதும்
இரக்கமில்லாமல் என்னை நீ வாட்டலாமோ நாளும்
வாடை காலமும் நீ வந்தால் வசந்தமாகலாம்
கொதித்திருக்கும் கோடை காலமும் நீ வந்தால் குளிர்ச்சி காணலாம்
எந்நாளும் தனிமையே எனது நிலைமையா
துன்பக்கவிதையோ கதையோ
இரு கண்ணும் என் நெஞ்சும்
இரு கண்ணும் நெஞ்சும் நீரில் ஆடுமோ

மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்
உன்னை விரும்பினேன் உயிரே
தினம் தினம் உந்தன் தரிசனம் 
பெறத் தவிக்குதே மனமே
இங்கு நீயில்லாது வாழும் வாழ்வு தான் ஏனோ

மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்
உன்னை விரும்பினேன் உயிரே
தினம் தினம் உந்தன் தரிசனம் 
பெறத் தவிக்குதே....


ஒரு பொழுதேனும் உன்னோடு சேர்ந்து வாழணும்
உயிர் பிரிந்தாலும் அன்பே உன் மார்பில் சாயணும்
மாலை மங்கலம் கொண்டாடும் வேளை வாய்க்குமோ
மணவறையில் நீயும் நானும் தான் பூச்சூடும் நாளும் தோன்றுமோ
ஒன்றாகும் பொழுதுதான் இனிய பொழுதுதான்
உந்தன் உறவு தான் உறவு
அந்த நாளை எண்ணி நானும்
அந்த நாளை எண்ணி நானும் வாடினேனே

மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்
உன்னை விரும்பினேன் உயிரே
தினம் தினம் உந்தன் தரிசனம் 
பெறத் தவிக்குதே மனமே
இங்கு நீயில்லாது வாழும் வாழ்வு தான் ஏனோ

மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்
உன்னை விரும்பினேன் உயிரே
தினம் தினம் உந்தன் தரிசனம் 
பெறத் தவிக்குதே....

பரயுவான் இதாத்யமாய் வரிகள் மாயே - Parayuvan Ithathyamaai Varigal Lyrics

பரயுவான் இதாத்யமாய் வரிகள் மாயே
மிழிகளில் ஒராயிரம் மழவில் போலே
சலபமாய் பரன்னொரால் அரிகில் சேரும்
பதியெ ஞான் தொடுன்னதும் அவளோ மாயும்
தீராதெ உள்ளிலினி இளமஞ்ஞின் சூடு
நூரானு நின்டே சிரகினு சேலெழும் தூவலே
நீயும் ஞானும் பண்டே பண்டே பூவும் வண்டும்
தேன்கணங்கள் திளங்கும் நேரம் பின்னெயும்

பரயுவான் இதாத்யமாய் வரிகள் மாயே
மிழிகளில் ஒராயிரம் மழவில் போலே
சலபமாய் பரன்னொரால் அரிகில் சேரும்
பதியெ ஞான் தொடுன்னதும் அவளோ மாயும்


மோதிரம் கைமாரான் மனசாலே மூளுன்னு சம்மதம்
தாரகள் மின்னுன்னு இனி நூறு நூராயிரம்
ஒரு பூக்காலம் கண்களிலாடுன்னு
ராவெதோ வெண்நதியாவுன்னு
கினாவுகள் துழஞ்ஞு நாம் தூரெ தூரெயொ
நிலாவிதள் மெனஞ்ஞொரா கூடு தேடியோ
ஓ..   ஓ....

பரயுவான் இதாத்யமாய் வரிகள் மாயே
மிழிகளில் ஒராயிரம் மழவில் போலே
சலபமாய் பரன்னொரால் அரிகில் சேரும்
பதியெ ஞான் தொடுன்னதும் அவளோ மாயும்
ஓ..   ஓ....

நூலும் இல்லை வாலும் இல்லை - Noolum Illai Vaalum Illai Lyrics

வசந்த ஊஞ்சலிலே அசைந்த பூங்கொடியே
உதிர்ந்த மாயமென்ன
உன் இதய சோகம் என்ன
உன் இதய சோகம் என்ன

நூலும் இல்லை வாலும் இல்லை
வானில் பட்டம் விடுவேனா
நாதி இல்லை தேவி இல்லை
நானும் வாழ்வை ரசிப்பேனா

நூலும் இல்லை வாலும் இல்லை
வானில் பட்டம் விடுவேனா
நாதி இல்லை தேவி இல்லை
நானும் வாழ்வை ரசிப்பேனா
நானும் வாழ்வை ரசிப்பேனா


நினைவு வெள்ளம் பெருகிவர
நெருப்பெனவே சுடுகிறது
படுக்கை விரித்துப் போட்டேன்
அதில் முள்ளாய் அவளின் நினைவு
பாலும் புலவி வெறுத்தேன்
அதில் ஏதோ இன்னும் உயிரு

படுக்கை விரித்துப் போட்டேன்
அதில் முள்ளாய் அவளின் நினைவு
பாலும் புலவி வெறுத்தேன்
அதில் ஏதோ இன்னும் உயிரு

மண்ணுலகில் ஜென்மம் என
என்னை ஏனோ இன்று வரை விட்டுவைத்தாய்
கண்ணிரண்டில் திராட்சை கொடி
எண்ணம் வைத்து கண்ணீரைப் பிழிந்தெடுத்தாய்
இறைவா... கண்ணீரைப் பிழிந்தெடுத்தாய்

நூலும் இல்லை வாலும் இல்லை
வானில் பட்டம் விடுவேனா
நாதி இல்லை தேவி இல்லை
நானும் வாழ்வை ரசிப்பேனா
நானும் வாழ்வை ரசிப்பேனா


நிழல் உருவில் இழைந்திருக்க
நிஜம் வடிவில் பிரிந்திருக்க
பூத்தால் மலரும் உதிரும்
நெஞ்சில் பூத்தாள் உதிரவில்லை
நிலவும் தேய்ந்து வளரும் 
அவள் நினைவோ தேய்வதில்லை

பூத்தால் மலரும் உதிரும்
நெஞ்சில் பூத்தாள் உதிரவில்லை
நிலவும் தேய்ந்து வளரும் 
அவள் நினைவோ தேய்வதில்லை

காடுதன்னில் பாவி உயிர் வேகும் வரை
பாவை உன்னை நினைத்திடுவேன்
பாடையிலே போகையிலும் தேவி உன்னைத்
தேடி உயிர் பறந்திடுமே
உறவைத் தேடி உயிர் பறந்திடுமே

நூலும் இல்லை வாலும் இல்லை
வானில் பட்டம் விடுவேனா
நாதி இல்லை தேவி இல்லை
நானும் வாழ்வை ரசிப்பேனா
நானும் வாழ்வை ரசிப்பேனா
நானும் வாழ்வை ரசிப்பேனா

செந்தூரப்பூவே இங்கு தேன் சிந்த - Senthoorapoove Ingu Then Sintha Lyrics

செந்தூரப்பூவே இங்கு தேன் சிந்த வா வா
தென்பாங்கு காற்றே நீயும் தேர் கொண்டு வா வா
இருகரை மீதிலே தன் நிலை மீறியே
ஒரு நதிபோலே என் நெஞ்சம் அலைமோதுதே

செந்தூரப்பூவே இங்கு தேன் சிந்த வா வா
தென்பாங்கு காற்றே நீயும் தேர் கொண்டு வா வா


வெண்பனி போல கண்களில் ஆடும்
மல்லிகை தோட்டம் கண்டேன்
அழகான வெள்ளைக்கிங்கே கலங்கங்கள் இல்லை
வெண்பனி போல கண்களில் ஆடும்
மல்லிகை தோட்டம் கண்டேன்
அழகான வெள்ளைக்கிங்கே கலங்கங்கள் இல்லை
அதுதானே என்றும் இங்கே நான் தேடும் எல்லை

செந்தூரப்பூவே இங்கு தேன் சிந்த வா வா
தென்பாங்கு காற்றே நீயும் தேர் கொண்டு வா வா


மின்னலைத் தேடும் தாழம்பூவே
உன் எழில் மின்னல் நானே
பனிப்பார்வை ஒன்றே போதும் பசிதீரும் மானே
மின்னலைத் தேடும் தாழம்பூவே
உன் எழில் மின்னல் நானே
பனிப்பார்வை ஒன்றே போதும் பசிதீரும் மானே
உறவாடும் எந்தன் நெஞ்சம் உனக்காகத்தானே

செந்தூரப்பூவே இங்கு தேன் சிந்த வா வா
தென்பாங்கு காற்றே நீயும் தேர் கொண்டு வா வா

அன்னங்கள் போலே எண்ணங்கள் கோடி
ஊர்வலம் போகும் வேளை
நிழல் தேடும் சோலை ஒன்றை விழியோரம் கண்டேன்
அன்னங்கள் போலே எண்ணங்கள் கோடி
ஊர்வலம் போகும் வேளை
நிழல் தேடும் சோலை ஒன்றை விழியோரம் கண்டேன்
நிழலாக நானும் மாற பறந்தோடி வந்தேன்

செந்தூரப்பூவே இங்கு தேன் சிந்த வா வா
தென்பாங்கு காற்றே நீயும் தேர் கொண்டு வா வா

பாதாள லோகத்துல அழகான கூடத்துல - Paathala Logathula Alagaana Lyrics

பாதாள லோகத்துல அழகான கூடத்துல
நாகாதி நாகருக்கும் நல்லகுறி சொல்லிவரும்
எம்பேரு அங்காளி எரிகாட்டு வேதாரி
என்னோட மல்லாடி வாதம் செய்ய வந்தாயோ
முனீஸ்வர ஈசா என்ன ஜெயிப்பது லேசா

ஆலால கண்ட முனி ஆலமரம் ஏறும் முனி
காலாதி காலனுக்கும் சண்டப்பிரசண்ட முனி
மாயாண்டி ரூபம் கொண்ட மயானத்தைக் காக்கும் முனி
முனியாண்டி என்னோட செய்யாதே அக்கப்போரு
ஈடுகாட்டுக் காளி சும்மா ஆடாதே நீலி

பாதாள லோகத்துல அழகான கூடத்துல
நாகாதி நாகருக்கும் நல்லகுறி சொல்லிவரும்
எம்பேரு அங்காளி எரிகாட்டு வேதாரி
என்னோட மல்லாடி வாதம் செய்ய வந்தாயோ
முனீஸ்வர ஈசா என்ன ஜெயிப்பது லேசா

ஆலால கண்ட முனி ஆலமரம் ஏறும் முனி
காலாதி காலனுக்கும் சண்டப்பிரசண்ட முனி
மாயாண்டி ரூபம் கொண்ட மயானத்தைக் காக்கும் முனி
முனியாண்டி என்னோட செய்யாதே அக்கப்போரு
ஈடுகாட்டுக் காளி சும்மா ஆடாதே நீலி

முனீஸ்வர ஈசா என்ன ஜெயிப்பது லேசா.. லேசா..
ஈடுகாட்டுக் காளி நான் சூட்சமதாரி

வங்காள வித்த காளி வழக்காட வந்த காளி
கேள்விய நீ கேக்கிறியா இல்ல நான் கேட்கட்டுமா
ஆண்டி முனியாண்டி பரதேசம் வந்த ஆண்டி
பொன்னுக்குத் தான் மொத இடம்
கேள்விய நானே கேட்குறேன்


கருகருன்னு கருத்தவனே கருத்தமுனி ஈஸ்வரனே
முடிமுடியா முடிஞ்சு போட்டு மொரட்டு ஜட பொழத்தவனே
தைபிறந்தா பாம்போடு திரிவதென்ன ராவோடு?
கையோடு திருவோடு இதுதானா உன் பாடு?
பிச்சாண்டி முனீஸ்வர ஈசா 
உன் லட்சணங்கள் இருக்குதய்யா பேசா
பிச்சாண்டி முனீஸ்வர ஈசா ஈசா 
உன் லட்சணங்கள் இருக்குதய்யா பேசா பேசா

காட்டேறிய சாட்டிவிட கருமுடிய வளர்த்துருக்கேன்
பிசாச மூக்கறுக்க பாம்புதடி வச்சுருக்கேன்
பண்டாரம் பசிதீர்க்க திருவோடு எடுத்திருக்கேன்
சண்டாளி ஏ காளி வாங்காதே வாயாடி
கருப்பட்டி நிறத்தாளே காளி
நீ பொறுப்பில்லாம கேக்கிறியே கேள்வி
கருப்பட்டி நிறத்தாளே காளி
நீ பொறுப்பில்லாம கேக்கிறியே கேள்வி

அண்ணன் தம்பி ஏழுபேரு அத்தனையும் தாருமாறு
வாள் முனையின் சேட்ட பாத்து பயப்படாத ஆளு யாரு?
அடங்காத முனிகளா ஆலங்காட்டு முனிகளா
ஊரையெல்லாம் பயமுறுத்த உருண்டு தெரண்டு வந்தீகளா?
மூண்டாதே முனீஸ்வர ஈசா 
பதில் கொண்டாடா முனீஸ்வர ஈசா
மூண்டாதே முனீஸ்வர ஈசா ஈசா 
பதில் கொண்டாடா முனீஸ்வர ஈசா

அண்ணன் தம்பி ஏழுபேரு அர்த்தமுள்ள தெய்வம் பாரு
மூர்க்கமான முனியிடத்தில் முத்து போல குணத்த பாரு
வாள் முனையின் விளையாட்ட பக்தி என்று சொல்லுவாரு
ஊருக்கெல்லாம் காவக்காரன் நாங்கதான்டி பத்ரகாளி
பாதங்கள் ஆடாதே காளி வீண் வம்புக்கு அலையாதே காளி

ஹ.. ஹ.. ஹ..
காளி நீயும் ஈசன் அம்சம் நானும் ஈசன் அம்சம்
என்ன நான் வீரம் நீ கோரம்
கோரம்ன்னு சொல்லாத கோவத்த கெளப்பாத
முடிஞ்சா கேள்விய கேளு இல்ல திரும்பி பாக்காம ஓடு ஓடு ஓடு

கேட்குறேன்


கொடுகொட்டி பறைதட்டி பகைமுட்டி தலைவெட்டி
விளையாட்டு செய்வதேன் காளி?
ஆண்டவனின் வரத்தாலே அரக்கர் பலர் முளைத்தாரே
அதனாலே பலிகொண்டேன் ஈசா
தீக்கொள்ளி அதை அள்ளி கண் கொண்ட ரணகள்ளி
கோரமாய் பார்ப்பதேன் காளி?
என்னருமை பிள்ளைகளை கண்ணீரைக் காக்கவரும்
அதை ஏவி ஓட்டவே ஈசா ஈசா
கடகமணி என்று கபாலங்கள் கொண்டு
மாலையென சூடியது ஏன்டி?
கதைமுடிவில் யாவர்க்கும் பாறைகளும் பாவர்க்கும்
என்பதை காட்டவே ஆண்டி
ஒரு ஊன்டு பலிகேட்டு உக்ரமாய் வெறியாட்டு
நடத்துவது அடுக்குமோ காளி?
என் மீது பலிபோட்டு மனிதர்களின் விளையாட்டு
அறியாமை என்றேனே ஈசா
பாவாட பூசாரி நாவோடு விளையாடி
உருலுமொழி சொல்வதேன் காளி?
இருளோட்டி அருள் காட்ட
மருளாட்டு விளையாட்டு அவர் மீது நடத்தினேன் ஈசா
கனவாசம் நீங்கி வனவாசம் வந்து 
வெளிவாசல் நிற்பதேன் காளி?
ஊராரைக் காக்க உறங்காமல் இருக்க
கடுங்காவல் செய்யவே ஈசா ஈசா

பாதாள லோகத்துல அழகான கூடத்துல
நாகாதி நாகருக்கும் நல்லகுறி சொல்லிவரும்
எம்பேரு அங்காளி எரிகாட்டு வேதாரி
என்னோட மல்லாடி வாதம் செய்ய வந்தாயோ
முனீஸ்வர ஈசா என்ன ஜெயிப்பது லேசா

ஆலால கண்ட முனி ஆலமரம் ஏறும் முனி
காலாதி காலனுக்கும் சண்டப்பிரசண்ட முனி
மாயாண்டி ரூபம் கொண்ட மயானத்தைக் காக்கும் முனி
முனியாண்டி என்னோட செய்யாதே அக்கப்போரு
ஈடுகாட்டுக் காளி சும்மா ஆடாதே நீலி

இதழில் கதை எழுதும் நேரமிது - Ithalil Kathai Eluthum Lyrics

இதழில் கதை எழுதும் நேரமிது
இதழில் கதை எழுதும் நேரமிது
இன்பங்கள் அழைக்குது.. ஆ..ஆ...

மனதில் சுகம் மலரும் மாலையிது
மான் விழி மயங்குது.. ஆ...ஆ..
மனதில் சுகம் மலரும் மாலையிது

இளமை அழகை அள்ளி அணைப்பதற்கே
இளமை அழகை அள்ளி அணைப்பதற்கே
இருகரம் துடிக்குது தனிமையில் நெருங்கிட இனிமையும் பிறக்குது

இதழில் கதை எழுதும் நேரமிது


காதல் கிளிகள் ரெண்டு சாடை பேசக் கண்டு
ஏதேதோ எண்ணம் என் நெஞ்சில் உதிக்கும்
நானும் நீயும் சேர்ந்து ராகம் பாடும்போது
நீரோடை போல என் நெஞ்சம் இனிக்கும்
இனிய பருவமுள்ள இளங்குயிலே
இனிய பருவமுள்ள இளங்குயிலே
ஏன் இன்னும் தாமதம் மன்மதக்காவியம் என்னுடன் எழுது

நானும் எழுதிட இளமையும் துடிக்குது
நாணம் அதை வந்து இடையினில் தடுக்குது
ஏங்கித்தவிக்கையில் நாணங்கள் எதற்கடி
ஏக்கம் தணிந்திட ஒருமுறை தழுவடி
காலம் வரும்வரை பொறுத்திருந்தால்
கன்னி இவள் மலர்க்கரம் தழுவிடுமே
காலம் என்றைக்கு கனிந்திடுமோ
காளை மனம் அது வரை பொறுத்திடுமோ
மாலை மணமாலையிடும் வேளைதனில் 
தேகம் இது விருந்துகள் படைத்திடும்

இதழில் கதை எழுதும் நேரமிது
இன்பங்கள் அழைக்குது.. ஆ..ஆ...
மனதில் சுகம் மலரும் மாலையிது


தோகைபோலே மின்னும் பூவை உந்தன் கூந்தல்
கார்மேகம் என்றே நான் சொல்வேன் கண்ணே
பாவை எந்தன் கூந்தல் வாசம் யாவும் அந்த
மேகந்தனில் ஏது நீ சொல்வாய் கண்ணா
அழகை சுமந்துவரும் அழகரசி
அழகை சுமந்துவரும் அழகரசி
ஆனந்த பூமுகம் அந்தியில் வந்திடும் சுந்தர நிலவோ

நாளும் நிலவது தேயுது மறையுது
நங்கை முகமென யாரதை சொன்னது
மங்கை உன் பதில் மனதினை கவருது
மாறன் கணை வந்து மார்பினில் பாயுது
காமன் கணைகளை தடுத்திடவே 
காதல் மயில் துணையென வருகிறது
மையல் தந்திடும் வார்த்தைகளே
மோகம் எனும் நெருப்பினை்ப் பொழிகிறது
மோகம் நெருப்பானால் அதை தீர்க்கும் 
ஒரு ஜீவநதி அருகினில் இருக்குது

மனதில் சுகம் மலரும் மாலையிது
மான் விழி மயங்குது.. ஆ...ஆ..
இதழில் கதை எழுதும் நேரமிது
இன்பங்கள் அழைக்குது.. ஆ..ஆ...

இதழில் கதை எழுதும் நேரமிது

நான் தேடும் செவ்வந்திப்பூவிது - Naan Thedum Sevvanthipoo Lyrics

ஆ..ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...

நான் தேடும் செவ்வந்திப்பூவிது
ஒரு நாள் பார்த்து அந்தியில் பூத்தது
பூவோ இது வாசம் போவோம் இனி காதல் தேசம்
பூவோ இது வாசம் போவோம் இனி காதல் தேசம்

நான் தேடும் செவ்வந்திப்பூவிது
ஒரு நாள் பார்த்து அந்தியில் பூத்தது


பறந்து செல்ல வழியில்லையோ
பருவக்குயில் தவிக்கிறதே
சிறகிரண்டும் விரித்துவிட்டேன்
இளமை அது தடுக்கிறதே
பொன்மானே என் யோகந்தான்
பெண்தானோ சந்தேகம் தான்
என் தேவி.. ஆ..ஆ..ஆ. ஆ...
உன் விழி ஓடையில் நான் கலந்தேன்
உன் கனி விழும் என தவம் கிடந்தேன்
பூங்காத்து சூடாச்சு ராஜாவே யார் மூச்சு

நான் தேடும்.. செவ்வந்திப்பூவிது.. ஆ..ஆ..
ஒரு நாள் பார்த்து.. அந்தியில் பூத்தது.. ஆ..ஆ..


மன்றத்தில் என்ன நிலவரமோ
மஞ்சத்தில் விழும் நிலை வருமோ
அன்னத்தை எந்தன் விரல் தொடுமோ
என்றைக்கும் அந்த சுகம் வருமோ
தள்ளாடும் பெண் மேகந்தான்
எந்நாளும் உன் வானம் நான்
என் தேவா... ஆ..ஆ..ஆ..ஆ..
கண்மலர் மூடிட ஏன் தவித்தேன்
என் விரல் நகங்களை தினம் இழந்தேன்
தாலாட்டுப் பாடாமல் தூங்காது என் கிள்ளை

நான் தேடும்.. செவ்வந்திப்பூவிது.. ஆ..ஆ..
ஒரு நாள் பார்த்து.. அந்தியில் பூத்தது.. ஆ..ஆ..
பூவோ இது வாசம் போவோம் இனி காதல் தேசம்
பூவோ இது வாசம் போவோம் இனி காதல் தேசம்

நான் தேடும்.. செவ்வந்திப்பூவிது.. ஆ..ஆ..
ஒரு நாள் பார்த்து.. அந்தியில் பூத்தது.. ஆ..ஆ..

எங்கே என் புன்னகை - Enge En Punnagai Lyrics

எங்கே என் புன்னகை எவர் கொண்டு போனது
எங்கே என் புன்னகை எவர் கொண்டு போனது
தீப்பட்ட மேகமாய் என் நெஞ்சு ஆனது
மேகத்தீ அணைக்க வா வா வா வா...
தாளத்தில் நீ சேரவா.. ஓ.. ஓ..
தாழிசை நான் பாடவா..

எங்கே என் புன்னகை எவர் கொண்டு போனது
தீப்பட்ட மேகமாய் என் நெஞ்சு ஆனது
மேகத்தீ அணைக்க வா வா வா வா...
தாளத்தில் நீ சேரவா.. ஓ.. ஓ..
தாழிசை நான் பாடவா..


மழை நீரில் தேகமோ தெப்பம் போல் நனைந்தது
தெப்பம் போல் நனைந்ததில் வெட்கம் ஏன் கரைந்தது
மழை நீரில் தேகமோ தெப்பம் போல் நனைந்தது
தெப்பம் போல் நனைந்ததில் வெட்கம் ஏன் கரைந்தது
என் ஆடை போலவே என் நெஞ்சம் குலைந்தது
நீர் செய்யும் லீலையை நீ செய்ய மனம் ஏங்குது
முகிலாலே நனைந்ததை முத்தத்தால் காய வை
எந்தன் தனிமையை தோள் செய்ய வா.. ஓ..ஓ..
தாளத்தில் நீ சேரவா.. ஓ.. ஓ..
தாழிசை நான் பாடவா..


பனி சிந்தும் சூரியன் அது உந்தன் பார்வையோ
பூக்களின் ராணுவம் அது உந்தன் மேனியோ
பனி சிந்தும் சூரியன் அது உந்தன் பார்வையோ
பூக்களின் ராணுவம் அது உந்தன் மேனியோ
கண்ணே உன் நெஞ்சமோ கடல் கொண்ட ஆழமோ
நம் சொந்தம் கூடுமோ ஒளியின் நிழலாகுமோ
காதல் மழை பொழியுமோ கண்ணீரில் நிரம்புமோ
அது காலத்தின் முடிவல்லவோ

தாளத்தில் நீ சேரவா.. ஓ.. ஓ..
தாழிசை நான் பாடவா..

எங்கே என் புன்னகை எவர் கொண்டு போனது
தீப்பட்ட மேகமாய் என் நெஞ்சு ஆனது
மேகத்தீ அணைக்க வா வா வா வா...
தாளத்தில் நீ சேரவா.. ஓ.. ஓ..
தாழிசை நான் பாடவா..

முத்துக் குளிக்க வாரீகளா - Muthu Kulika Vaareegalaa Lyrics

முத்துக் குளிக்க வாரீகளா
மூச்சை அடக்க வாரீகளா
முத்துக் குளிக்க வாரீகளா
மூச்சை அடக்க வாரீகளா

சிப்பி எடுப்போமா மாமா மாமா
அம்மலுக்கும் சொந்தமில்லையோ
சிப்பி எடுப்போமா மாமா மாமா
அம்மலுக்கும் சொந்தமில்லையோ

முத்துக் குளிக்க வாரீகளா


ஏலா முத்தம்மா ஒன் மனசு எம்புட்டு
என்கிட்டதான் சொல்லோடியம்மா
மாமா...
ஏலா முத்தம்மா ஒன் மனசு எம்புட்டு
என்கிட்டதான் சொல்லோடியம்மா
நாளாம்நாளுமில்ல முத்தெடுக்க
நம்மள நீ கூப்பிட்டதென்னடியம்மா
நாளாம்நாளுமில்ல முத்தெடுக்க
நம்மள நீ கூப்பிட்டதென்னடியம்மா

முத்துக் குடுக்க வாரீகளா
கத்து குடுக்க வாரீகளா
சங்கு பறிப்போமா ஏலா ஏலா
அம்மலுக்கும் சொந்தமில்லையோ

முத்துக் குடுக்க வாரீகளா


ஆளான பொண்ணுக பாக்கு வைக்கும் முன்னமே
என்னவென்னு சொல்லுவாக
ஆளான பொண்ணுக பாக்கு வைக்கும் முன்னமே
என்னவென்னு சொல்லுவாக
ஆ.. கோளாறு பண்ணாமே கிட்டவந்து
கொஞ்சுங்க சினிமாவில் கொஞ்சிராப்பில

காத்தவராயனை ஆரியமாலா காதலிச்ச மாதிரியிலா
காத்தவராயனை ஆரியமாலா காதலிச்ச மாதிரியிலா
ஜிஞ்ஜின்னாக்கடி ஜிஞ்ஜின்னாக்கடி 
பாத்தீகல்ல நீங்களும் அந்த சரசம் பண்ணிப்பாருங்க
ஜிஞ்ஜின்னாக்கடி ஜிஞ்ஜின்னாக்கடி 
பாத்தீகல்ல நீங்களும் அந்த சரசம் பண்ணிப்பாருங்க

ஓஹோ...

ஓ...ஓ...ஓ...ஓ..ஓ...

முத்துக் குடுக்க வாரீகளா
கத்து குடுக்க வாரீகளா
முத்துக் குளிக்க வாரீகளா
மூச்சை அடக்க வாரீகளா

போயும் போயும் மனிதனுக்கிந்த - Poyum Poyum Manithanukinda Lyrics

போயும் போயும் மனிதனுக்கிந்த
புத்தியைக் கொடுத்தானே
இறைவன் புத்தியைக் கொடுத்தானே

அதில் பொய்யும் புரட்டும் திருட்டும் கலந்து
பூமியைக் கெடுத்தானே
மனிதன் பூமியைக் கெடுத்தானே

போயும் போயும் மனிதனுக்கிந்த
புத்தியைக் கொடுத்தானே


கண்கள் இரண்டில் அருள் இருக்கும்
சொல்லும் கருத்தினில் ஆயிரம் பொருள் இருக்கும்
கண்கள் இரண்டில் அருள் இருக்கும்
சொல்லும் கருத்தினில் ஆயிரம் பொருள் இருக்கும்
உள்ளத்தில் பொய்யே நிறைந்திருக்கும்
அது உடன்பிறந்தோரையும் கருவறுக்கும்

பாயும் புலியின் கொடுமையை இறைவன்
பார்வையில் வைத்தானே
புலியின் பார்வையில் வைத்தானே

இந்த பாழும் மனிதன் குணங்களை மட்டும்
போர்வையில் மறைத்தானே
இதயப் போர்வையில் மறைத்தானே

போயும் போயும் மனிதனுக்கிந்த
புத்தியைக் கொடுத்தானே


கைகளைத் தோளில் போடுகிறான்
அதைக் கருணை என்றவன் கூறுகிறான்
கைகளைத் தோளில் போடுகிறான்
அதைக் கருணை என்றவன் கூறுகிறான்
பைகளில் எதையோ தேடுகிறான்
கையில் பட்டதை எடுத்து ஓடுகிறான்

போயும் போயும் மனிதனுக்கிந்த
புத்தியைக் கொடுத்தானே
இறைவன் புத்தியைக் கொடுத்தானே

அதில் பொய்யும் புரட்டும் திருட்டும் கலந்து
பூமியைக் கெடுத்தானே
மனிதன் பூமியைக் கெடுத்தானே

போயும் போயும் மனிதனுக்கிந்த
புத்தியைக் கொடுத்தானே

குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் - Kurukku Valiyil Vaalvu Lyrics

குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும்
குருட்டு உலகமடா
இது கொள்ளையடிப்பதில் வல்லமை காட்டும்
திருட்டு உலகமடா

தம்பி..
தெரிந்து நடந்து கொள்ளடா
இதயம் திருந்த மருந்து சொல்லடா

இருக்கும் அறிவை மடமை மூடிய
இருட்டு உலகமடா
வாழ்வில் எந்த நேரமும் சண்டை ஓயாத
முரட்டு உலகமடா

தம்பி..
தெரிந்து நடந்து கொள்ளடா
இதயம் திருந்த மருந்து சொல்லடா

குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும்
குருட்டு உலகமடா
இது கொள்ளையடிப்பதில் வல்லமை காட்டும்
திருட்டு உலகமடா

தம்பி..
தெரிந்து நடந்து கொள்ளடா
இதயம் திருந்த மருந்து சொல்லடா


விளையும் பயிரை வளரும் கொடியை
வேருடன் அறுத்து விளையாடும்
ஓ..ஓ..ஓ..
விளையும் பயிரை வளரும் கொடியை
வேருடன் அறுத்து விளையாடும்
மனம் வெந்திடும் தோட்டக்காரனிடம்
மிரட்டல் வார்த்தைகள் ஆடும்
பல வறட்டு கீதமும் பாடும்
விதவிதமான பொய்களை வைத்து
புரட்டும் உலகமடா

தம்பி..
தெரிந்து நடந்து கொள்ளடா
இதயம் திருந்த மருந்து சொல்லடா


அன்பு படர்ந்த கொம்பினிலே
ஒரு அகந்தை குரங்கு தாவும்
அதன் அழகைக் குலைக்க மேவும்
கொம்பு ஒடிந்து கொடியும் குலைந்து
குரங்கும் விழுந்து சாகும்
கொம்பு ஒடிந்து கொடியும் குலைந்து
குரங்கும் விழுந்து சாகும்
சிலர் குணமும் இதுபோல் குறுகிப்போகும்
கிறுக்கு உலகமடா

தம்பி..
தெரிந்து நடந்து கொள்ளடா
இதயம் திருந்த மருந்து சொல்லடா

குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும்
குருட்டு உலகமடா
இது கொள்ளையடிப்பதில் வல்லமை காட்டும்
திருட்டு உலகமடா

தம்பி..
தெரிந்து நடந்து கொள்ளடா
இதயம் திருந்த மருந்து சொல்லடா

ஜனவரி நிலவே நலம்தானா - Janavari Nilave Nalam Thana Lyrics

ஜனவரி நிலவே நலம்தானா
ஜனகனின் மகளே சுகம்தானா
உன்னிடத்தில் என்னை அள்ளிக் கொடுத்தேன்
உன் பெயரை என் மனதில் விதைத்தேன்
என் உயிரை உன் நிழலில் தொலைத்தேன்
என்னென்னமோ பேச எண்ணித் தவித்தேன்

பொய் சொல்லாதே பொய் சொல்லாதே
ஓ... பொய் சொல்லாதே

ஜனவரி நிலவே நலம்தானா
ஜனகனின் மகளே சுகம்தானா
உன்னிடத்தில் என்னை அள்ளிக் கொடுத்தேன்
உன் பெயரை என் மனதில் விதைத்தேன்
என் உயிரை உன் நிழலில் தொலைத்தேன்
என்னென்னமோ பேச எண்ணித் தவித்தேன்

பொய் சொல்லாதே பொய் சொல்லாதே
ஓ... பொய் சொல்லாதே


உன்னைவிட ரதியும் அழகில்லை....பொய் சொல்லாதே
உன்னைவிட நதியும் அழகில்லை... பொய் சொல்லாதே
உன்னைவிட மலரும் அழகில்லை... பொய் சொல்லாதே
உன்னைவிட மயிலும் அழகில்லை... பொய் சொல்லாதே

ரதியும் அழகில்லை நதியும் அழகில்லை
மலரும் அழகில்லை மயிலும் அழகில்லை
பொய் சொல்லாதே

விண்ணும் அழகில்லை மண்ணும் அழகில்லை
மானும் அழகில்லை நானும் அழகில்லை
பொய் சொல்லாதே

ஜன்னலோரம் மின்னல் வந்து சிரிக்கும்
கண்ணுக்குள்ளே காதல் மழை அடிக்கும்
மூச்சு நின்று போனபின்பும் எனக்கும்
நெஞ்சில் உந்தன் ஞாபகமே இருக்கும்

பொய் சொல்லாதே பொய் சொல்லாதே
ஓ... பொய் சொல்லாதே


நேற்று வரை நெஞ்சினில் யாருமில்லை.. பொய் சொல்லாதே
இன்று முதல் இதயம் துடிக்கவில்லை.. பொய் சொல்லாதே
உனைக்காணும் வரை காதல் தெரியவில்லை.. பொய் சொல்லாதே
கண்டபின்பு கண்ணில் தூக்கமில்லை...பொய் சொல்லாதே

நிலவு நீயின்றி இரவும் எனக்கில்லை
பாவை நீயின்றி பகலும் எனக்கில்லை
பொய் சொல்லாதே

இன்னும் ஒரு கோடி ஜென்மம் வரும்போதும்
வஞ்சி நீயின்றி வாழ்க்கை எனக்கில்லை
பொய் சொல்லாதே

உன் பாதம் பட்ட பூமி இன்னும் ஜொலிக்கும்
நீ சூடிக்கொண்ட காகிதப்பூ மணக்கும்
உன் புன்னகையில் என் மனது திறக்கும்
உன் கண்ணசைவில் காதல் கொடி பறக்கும்

பொய் சொல்லாதே பொய் சொல்லாதே
ஓ... பொய் சொல்லாதே

ஜனவரி நிலவே நலம்தானா
ஜனகனின் மகளே சுகம்தானா
உன்னிடத்தில் என்னை அள்ளிக் கொடுத்தேன்
உன் பெயரை என் மனதில் விதைத்தேன்
என் உயிரை உன் நிழலில் தொலைத்தேன்
என்னென்னமோ பேச எண்ணித் தவித்தேன்

பொய் சொல்லாதே பொய் சொல்லாதே
ஓ... பொய் சொல்லாதே

எங்கிருந்தோ இளங்குயிலின் - Engiruntho Ilanguyilin Lyrics

எங்கிருந்தோ இளங்குயிலின்
இன்னிசைக் கேட்டு கண்விழித்தேன்
நினைவு அலைகள் மனதில் எழும்பும் நேரம்
தட்டிவிட்டேன் மனக்கதவை
திறந்து பார்க்க விரைந்துவா
நெஞ்சம் உந்தன் நெஞ்சம் கொண்ட சஞ்சலங்கள் மறைய

எங்கிருந்தோ இளங்குயிலின்
இன்னிசைக் கேட்டு கண்விழித்தேன்


நீங்காமல் தானே நிழல்போல நானே
வருவேன் உன் பின்னோடு எந்நாளும்தான்
பூப்போன்ற மனதை பொல்லாத மனதாய்
தவறாக எடைபோட்டு நீ சென்றாலும்தான்
பாலைப் போல கள்ளும் கூட வெண்மையானது
பருகிடாது விளங்கிடாது உண்மையானது
நீயும் காணக்கூடும் இங்கு ஓர் தினம் இந்த பால் மனம்

எங்கிருந்தோ இளங்குயிலின்
இன்னிசைக் கேட்டு கண்விழித்தேன்


பூர்வீகம் உனக்கு எதுவென்று எனக்கு
மறைத்தாலும் என் கண்கள் ஏமாறுமா
புரியாத புதிராய் விளங்காத விடையாய்
இருந்தாலும் உண்மைகள் பொய்யாகுமா
என்னைக் கண்டு அச்சம் கொள்ள தேவையில்லையே
வேலி மீது குற்றம் சொன்ன தோட்டமில்லையே
நண்பன் என்று என்னை ஏற்கும் நாள் வரும் அந்த நாள் வரும்

எங்கிருந்தோ இளங்குயிலின்
இன்னிசைக் கேட்டு கண்விழித்தேன்
நினைவு அலைகள் மனதில் எழும்பும் நேரம்
தட்டிவிட்டேன் மனக்கதவை
திறந்து பார்க்க விரைந்துவா
நெஞ்சம் உந்தன் நெஞ்சம் கொண்ட சஞ்சலங்கள் மறைய

எங்கிருந்தோ இளங்குயிலின்
இன்னிசைக் கேட்டு கண்விழித்தேன்

வானத்த பாத்தேன் பூமிய பாத்தேன் - Vaanatha Paathen Boomiya Paathen Lyrics

வானத்த பாத்தேன் பூமிய பாத்தேன்
மனுசன இன்னும் பார்க்கலயே
வானத்த பாத்தேன் பூமிய பாத்தேன்
மனுசன இன்னும் பார்க்கலயே
அட பலநாள் இருந்தேன் உள்ள
அந்த நிம்மதி இங்கில்ல

உள்ளபோன அத்தன பேரும் குத்தவாளி இல்லீங்க
வெளிய உள்ள அத்தன பேரும் புத்தன் காந்தி இல்லீங்க

வானத்த பாத்தேன் பூமிய பாத்தேன்
மனுசன இன்னும் பார்க்கலயே


குரங்கிலிருந்து பிறந்தானா குரங்கை மனிதன் பெற்றானா
யாரை கேள்வி கேட்பது டார்வின் இல்லயே
கடவுள் மனிதனை படைத்தானா
கடவுளை மனிதன் படைத்தானா
ரெண்டு பேரும் இல்லயே ரொம்ப தொல்லையே
அட நான் சொல்வது உண்மை
இதை நீ நம்பினால் நன்மை
அட நான் சொல்வது உண்மை
இதை நீ நம்பினால் நன்மை

வானத்த பாத்தேன் பூமிய பாத்தேன்
மனுசன இன்னும் பார்க்கலயே
அட பலநாள் இருந்தேன் உள்ள
அந்த நிம்மதி இங்கில்ல


சில நாள் இருந்தேன் கருவறையில்
பல நாள் கிடந்தேன் சிறையறையில்
அம்மா எனை ஈன்றது அமாவாசையா
அதனால் பிறந்தது தொல்லையடா
ஆனால் என் மனம் வெள்ளையடா
பட்டபாடு யாவுமே பாடம் தானடா
ஒரு பூந்தோட்டமா வாழ்க்கை
இல்லை போராட்டமே வாழ்க்கை
ஒரு பூந்தோட்டமா வாழ்க்கை
இல்லை போராட்டமே வாழ்க்கை

வானத்த பாத்தேன் பூமிய பாத்தேன்
மனுசன இன்னும் பார்க்கலயே
அட பலநாள் இருந்தேன் உள்ள
அந்த நிம்மதி இங்கில்ல

உள்ளபோன அத்தன பேரும் குத்தவாளி இல்லீங்க
வெளிய உள்ள அத்தன பேரும் புத்தன் காந்தி இல்லீங்க

வானத்த பாத்தேன் பூமிய பாத்தேன்
மனுசன இன்னும் பார்க்கலயே
அட பலநாள் இருந்தேன் உள்ள
அந்த நிம்மதி இங்கில்ல
அந்த நிம்மதி இங்கில்ல

வண்ண வண்ண சொல்லெடுத்து - Vanna Vanna Solleduthu Lyrics

வண்ண வண்ண சொல்லெடுத்து
இங்கு வந்தது செந்தமிழ்பாட்டு
வாசமுள்ள மல்லிகைப்போல் மனம்
தந்தது செந்தமிழ்பாட்டு

வண்ண வண்ண சொல்லெடுத்து
இங்கு வந்தது செந்தமிழ்பாட்டு
வாசமுள்ள மல்லிகைப்போல் மனம்
தந்தது செந்தமிழ்பாட்டு

ஊருசனம் எல்லாரும் விரும்பும் இசைதான் என்றும் வாழும்
மனிதஜாதி பாட்டொன்றினால்தான் கவலை மறக்கும் நாளும்

வண்ண வண்ண சொல்லெடுத்து
இங்கு வந்தது செந்தமிழ்பாட்டு
வாசமுள்ள மல்லிகைப்போல் மனம்
தந்தது செந்தமிழ்பாட்டு


மொழிகள் வெவ்வேறு பாடல் கொண்டாலும்
இனிமை ஒன்றானது
தமிழர் பண்பாட்டை கூறும் பாட்டுக்கு
தமிழே கண்போன்றது

மொழிகள் வெவ்வேறு பாடல் கொண்டாலும்
இனிமை ஒன்றானது
தமிழர் பண்பாட்டை கூறும் பாட்டுக்கு
தமிழே கண்போன்றது

மூங்கிலினை மோதிவரும் காற்றும் இசைதான் தராதோ..ஓ..
மூன்று தமிழ் வாசமும் நாட்டுப்புறப்பாடலில் 
பொதுப்புனல் போலே வராதோ

வண்ண வண்ண சொல்லெடுத்து
இங்கு வந்தது செந்தமிழ்பாட்டு
வாசமுள்ள மல்லிகைப்போல் மனம்
தந்தது செந்தமிழ்பாட்டு

கொஞ்ச நாள் பொறு தலைவா - Konja Naal Poru Thalaivaa Lyrics

கொஞ்ச நாள் பொறு தலைவா
ஒரு வஞ்சிக்கொடி இங்கே வருவா
கண்ணிரெண்டில் போர் தொடுப்பா
அந்த வெண்ணிலவ தோற்கடிப்பா

ஹே... ஆ...

கொஞ்ச நாள் பொறு தலைவா
ஒரு வஞ்சிக்கொடி இங்கே வருவா
கண்ணிரெண்டில் போர் தொடுப்பா
அந்த வெண்ணிலவ தோற்கடிப்பா

காமாட்சி மீனாட்சி என்ன பேரோ நான் அறியேன்
தென்னாடோ எந்நாடோ எந்த ஊரோ நான் அறியேன்
ராசாத்தி ராசாத்தி அட்ரெஸ் என்ன கண்டுபிடி
ராவோடு ராவாக அள்ளிவர நாங்க ரெடி

ஓ...ஓ...ஓ...


ஓ.. நேத்துக்கூட தூக்கத்தில
பாத்தேன் அந்த பூங்குயில
தூத்துக்குடி முத்தெடுத்து
கோர்த்துவச்ச மாலை போல
வேர்த்துக் கொட்டி கண்முழிச்சு பார்த்தா
அவ ஓடிப்போனா உச்சிமல காத்தா
சொப்பனத்தில் இப்படித்தான் எப்பவுமே வந்துநிப்பா
சொல்லப்போனா பேரழகி சொக்கத்தங்கம் போலிருப்பா
வத்திக்குச்சி இல்லாமலே காதல் தீய பத்தவப்பா
தேனாறு பாலாறு போல வந்தா கண்ணுக்குள்ள
தேசியக் கொடி போல குத்திவச்சேன் நெஞ்சுக்குள்ள
ராசாத்தி ராசாத்தி அட்ரெஸ் என்ன கண்டுபிடி
ராவோடு ராவாக அள்ளிவர நாங்க ரெடி

ம்..ம்..ம்..ம்..
பச்சைதாவணி பறக்க அங்கு தன்னையே அவன் மறக்க
வச்ச கண்ணு வாங்கலயே என் மாமன் கண்ணு தூங்கலயே


என்னோடுதான் கண்ணாமூச்சி
ஹை ஹை.. என்றும் ஆடும் பட்டாம்பூச்சி
கட்டாயம் என் காதல் ஆட்சி
கைகூடும் பார் தென்றல் சாட்சி
சிந்நனையில் வந்து வந்து போறா
அவ சந்தனத்தில் செஞ்சுவச்ச தேரா
என்னுடைய காதலிய ரொம்ப ரொம்ப பத்திரமா
எண்ணம் எங்கும் ஒட்டிவச்ச வண்ண வண்ண சித்திரமா
வேறொருத்தி வந்து தங்க என் மனசு சத்திரமா
ஆத்தாடி அம்மாடி என்ன சொல்ல கட்டழக
ஆவாரம்பூவாக வாய் வெடிச்ச மொட்டழக
ராசாத்தி ராசாத்தி அட்ரெஸ் என்ன கண்டுபிடி
ராவோடு ராவாக அள்ளிவர நாங்க ரெடி

கொஞ்ச நாள் பொறு தலைவா
ஒரு வஞ்சிக்கொடி இங்கே வருவா
கண்ணிரெண்டில் போர் தொடுப்பா
அந்த வெண்ணிலவ தோற்கடிப்பா

அட காமாட்சி மீனாட்சி என்ன பேரோ நான் அறியேன்
தென்னாடோ எந்நாடோ எந்த ஊரோ நான் அறியேன்
ராசாத்தி ராசாத்தி அட்ரெஸ் என்ன கண்டுபிடி
ராவோடு ராவாக அள்ளிவர நாங்க ரெடி

சின்ன சின்ன கண்ணம்மா - Chinna Chinna Kannamma Lyrics

சின்ன சின்ன கண்ணம்மா என்னிரண்டு வருஷமா
சின்ன சின்ன கண்ணம்மா என்னிரண்டு வருஷமா
உன்ன எண்ணி பூத்திருக்கா

புத்தம்புது பூவால நித்தம் ஒரு பூமால
கட்டிவச்சு காத்திருக்கா
தொண்டக்குழிக்குள் நூறு நெனப்பு
நான் சொல்ல தவிப்பு
ஏ.. உல்லாசக் குயிலே நீயாச்சும் வாய் பேசு
ஒன் ஒவ்வொரு வார்த்தைக்கும் தாரேன் தங்கக்காசு

சின்ன சின்ன கண்ணம்மா


பல்லு தேய்க்கத் தெரியாது தேச்சுவிட்டதும் நீதான்
பாவாடைக்கு நாடாவ கட்டி விட்டதும் நீதான்
அங்கங்கே மருதாணி அப்பிவிட்டதும் நீதான்
நான் ஆளான அந்நேரம் பக்கம் நின்னதும் நீதான்

மஞ்சத்தண்ணி எடுத்து நீதான் நீதான் நீயேதான்
மாமன்காரன் எனக்கு நீதான் நீதான் நீயேதான்
மாராப்பு சரிசெஞ்ச மகராசன் நீயேதான்
என் நெத்தியில பொட்டுவச்ச ஒத்தவிரல் நீயேதான்

சின்ன சின்ன கண்ணம்மா


என்னப்போல ஒன்மேல ஆசவச்சவ இல்ல
ஒன்னப்போல உள்ளூரில் மீசவச்சவன் இல்ல
அத்தானே ஒனக்கும் நான் தாலி கட்ட போறேன்
ஐயேழு நாளோடு முழுகாம போறேன்

இந்தக்கதை தானே இரவும் பகலும் விரிவாக
மாதம் ஏழு போக வளவி போட வருவாக
கண்ணால நம் மீது கண்வைக்க போறாக
ஒன்ன நானும் பொத்தி வப்பேன் மண்ணுக்குள்ள வேராக

சின்ன சின்ன கண்ணம்மா என்னிரண்டு வருஷமா
உன்ன எண்ணி பூத்திருக்கா
புத்தம்புது பூவால நித்தம் ஒரு பூமால
கட்டிவச்சு காத்திருக்கா
தொண்டக்குழிக்குள் நூறு நெனப்பு
நான் சொல்ல தவிப்பு
ஏ.. உல்லாசக் குயிலே நீயாச்சும் வாய் பேசு
ஒன் ஒவ்வொரு வார்த்தைக்கும் தாரேன் தங்கக்காசு

அல்லாஹ் அல்லாஹ் - Allah Allah Yah Allah Lyrics

அல்லாஹூ அக்பர்.. அல்லாஹூ அக்பர்

நீ இல்லாத இடமே இல்லை நீ தானே உலகின் எல்லை
அல்லாஹ் அல்லாஹ் யா அல்லாஹ் அல்லாஹ்

நீ இல்லாத இடமே இல்லை நீ தானே உலகின் எல்லை
அல்லாஹ் அல்லாஹ் யா அல்லாஹ் அல்லாஹ்

அல்லாஹ் அல்லாஹ் யா அல்லாஹ் அல்லாஹ்


நிலம் வெளுக்க நீர் தான் உண்டு
நீர் வெளுக்க மீன் தான் உண்டு
நிலம் வெளுக்க நீர் தான் உண்டு
நீர் வெளுக்க மீன் தான் உண்டு
மனம் வெளுக்க எது தான் உண்டு
நபியே உன் வேதம் உண்டு

அல்லாஹ் அல்லாஹ் யா அல்லாஹ் அல்லாஹ்

நீ இல்லாத இடமே இல்லை நீ தானே உலகின் எல்லை
அல்லாஹ் அல்லாஹ் யா அல்லாஹ் அல்லாஹ்


உடலுக்கு ஒன்பது வாசல்
மனதுக்கு எண்பது வாசல்
உடலுக்கு ஒன்பது வாசல்
மனதுக்கு எண்பது வாசல்
உயிருக்கு உயிராய் காணும்
ஒரு வாசல் பள்ளிவாசல்

அல்லாஹ் அல்லாஹ் யா அல்லாஹ் அல்லாஹ்
அல்லாஹ் அல்லாஹ் யா அல்லாஹ் அல்லாஹ்

இருப்போர்க்கு எல்லாம் சொந்தம்
இல்லார்க்கு எது தான் சொந்தம்
இருப்போர்க்கு எல்லாம் சொந்தம்
இல்லார்க்கு எது தான் சொந்தம்
நல்லார்க்கும் பொல்லார்க்கும் தான்
நாயகமே நீயே சொந்தம்

அல்லாஹ் அல்லாஹ் யா அல்லாஹ் அல்லாஹ்

நீ இல்லாத இடமே இல்லை நீ தானே உலகின் எல்லை
அல்லாஹ் அல்லாஹ் யா அல்லாஹ் அல்லாஹ்