எங்கே என் புன்னகை - Enge En Punnagai Lyrics

எங்கே என் புன்னகை எவர் கொண்டு போனது
எங்கே என் புன்னகை எவர் கொண்டு போனது
தீப்பட்ட மேகமாய் என் நெஞ்சு ஆனது
மேகத்தீ அணைக்க வா வா வா வா...
தாளத்தில் நீ சேரவா.. ஓ.. ஓ..
தாழிசை நான் பாடவா..

எங்கே என் புன்னகை எவர் கொண்டு போனது
தீப்பட்ட மேகமாய் என் நெஞ்சு ஆனது
மேகத்தீ அணைக்க வா வா வா வா...
தாளத்தில் நீ சேரவா.. ஓ.. ஓ..
தாழிசை நான் பாடவா..


மழை நீரில் தேகமோ தெப்பம் போல் நனைந்தது
தெப்பம் போல் நனைந்ததில் வெட்கம் ஏன் கரைந்தது
மழை நீரில் தேகமோ தெப்பம் போல் நனைந்தது
தெப்பம் போல் நனைந்ததில் வெட்கம் ஏன் கரைந்தது
என் ஆடை போலவே என் நெஞ்சம் குலைந்தது
நீர் செய்யும் லீலையை நீ செய்ய மனம் ஏங்குது
முகிலாலே நனைந்ததை முத்தத்தால் காய வை
எந்தன் தனிமையை தோள் செய்ய வா.. ஓ..ஓ..
தாளத்தில் நீ சேரவா.. ஓ.. ஓ..
தாழிசை நான் பாடவா..


பனி சிந்தும் சூரியன் அது உந்தன் பார்வையோ
பூக்களின் ராணுவம் அது உந்தன் மேனியோ
பனி சிந்தும் சூரியன் அது உந்தன் பார்வையோ
பூக்களின் ராணுவம் அது உந்தன் மேனியோ
கண்ணே உன் நெஞ்சமோ கடல் கொண்ட ஆழமோ
நம் சொந்தம் கூடுமோ ஒளியின் நிழலாகுமோ
காதல் மழை பொழியுமோ கண்ணீரில் நிரம்புமோ
அது காலத்தின் முடிவல்லவோ

தாளத்தில் நீ சேரவா.. ஓ.. ஓ..
தாழிசை நான் பாடவா..

எங்கே என் புன்னகை எவர் கொண்டு போனது
தீப்பட்ட மேகமாய் என் நெஞ்சு ஆனது
மேகத்தீ அணைக்க வா வா வா வா...
தாளத்தில் நீ சேரவா.. ஓ.. ஓ..
தாழிசை நான் பாடவா..

No comments:

Post a Comment