வசந்த ஊஞ்சலிலே அசைந்த பூங்கொடியே
உதிர்ந்த மாயமென்ன
உன் இதய சோகம் என்ன
உன் இதய சோகம் என்ன
வானில் பட்டம் விடுவேனா
நாதி இல்லை தேவி இல்லை
நானும் வாழ்வை ரசிப்பேனா
நூலும் இல்லை வாலும் இல்லை
வானில் பட்டம் விடுவேனா
நாதி இல்லை தேவி இல்லை
நானும் வாழ்வை ரசிப்பேனா
நானும் வாழ்வை ரசிப்பேனா
நினைவு வெள்ளம் பெருகிவர
நெருப்பெனவே சுடுகிறது
படுக்கை விரித்துப் போட்டேன்
அதில் முள்ளாய் அவளின் நினைவு
பாலும் புலவி வெறுத்தேன்
அதில் ஏதோ இன்னும் உயிரு
படுக்கை விரித்துப் போட்டேன்
அதில் முள்ளாய் அவளின் நினைவு
பாலும் புலவி வெறுத்தேன்
அதில் ஏதோ இன்னும் உயிரு
மண்ணுலகில் ஜென்மம் என
என்னை ஏனோ இன்று வரை விட்டுவைத்தாய்
கண்ணிரண்டில் திராட்சை கொடி
எண்ணம் வைத்து கண்ணீரைப் பிழிந்தெடுத்தாய்
இறைவா... கண்ணீரைப் பிழிந்தெடுத்தாய்
நூலும் இல்லை வாலும் இல்லை
வானில் பட்டம் விடுவேனா
நாதி இல்லை தேவி இல்லை
நானும் வாழ்வை ரசிப்பேனா
நானும் வாழ்வை ரசிப்பேனா
நிழல் உருவில் இழைந்திருக்க
நிஜம் வடிவில் பிரிந்திருக்க
பூத்தால் மலரும் உதிரும்
நெஞ்சில் பூத்தாள் உதிரவில்லை
நிலவும் தேய்ந்து வளரும்
அவள் நினைவோ தேய்வதில்லை
பூத்தால் மலரும் உதிரும்
நெஞ்சில் பூத்தாள் உதிரவில்லை
நிலவும் தேய்ந்து வளரும்
அவள் நினைவோ தேய்வதில்லை
காடுதன்னில் பாவி உயிர் வேகும் வரை
பாவை உன்னை நினைத்திடுவேன்
பாடையிலே போகையிலும் தேவி உன்னைத்
தேடி உயிர் பறந்திடுமே
உறவைத் தேடி உயிர் பறந்திடுமே
நூலும் இல்லை வாலும் இல்லை
வானில் பட்டம் விடுவேனா
நாதி இல்லை தேவி இல்லை
நானும் வாழ்வை ரசிப்பேனா
நானும் வாழ்வை ரசிப்பேனா
நானும் வாழ்வை ரசிப்பேனா
No comments:
Post a Comment