வண்ண வண்ண சொல்லெடுத்து - Vanna Vanna Solleduthu Lyrics

வண்ண வண்ண சொல்லெடுத்து
இங்கு வந்தது செந்தமிழ்பாட்டு
வாசமுள்ள மல்லிகைப்போல் மனம்
தந்தது செந்தமிழ்பாட்டு

வண்ண வண்ண சொல்லெடுத்து
இங்கு வந்தது செந்தமிழ்பாட்டு
வாசமுள்ள மல்லிகைப்போல் மனம்
தந்தது செந்தமிழ்பாட்டு

ஊருசனம் எல்லாரும் விரும்பும் இசைதான் என்றும் வாழும்
மனிதஜாதி பாட்டொன்றினால்தான் கவலை மறக்கும் நாளும்

வண்ண வண்ண சொல்லெடுத்து
இங்கு வந்தது செந்தமிழ்பாட்டு
வாசமுள்ள மல்லிகைப்போல் மனம்
தந்தது செந்தமிழ்பாட்டு


மொழிகள் வெவ்வேறு பாடல் கொண்டாலும்
இனிமை ஒன்றானது
தமிழர் பண்பாட்டை கூறும் பாட்டுக்கு
தமிழே கண்போன்றது

மொழிகள் வெவ்வேறு பாடல் கொண்டாலும்
இனிமை ஒன்றானது
தமிழர் பண்பாட்டை கூறும் பாட்டுக்கு
தமிழே கண்போன்றது

மூங்கிலினை மோதிவரும் காற்றும் இசைதான் தராதோ..ஓ..
மூன்று தமிழ் வாசமும் நாட்டுப்புறப்பாடலில் 
பொதுப்புனல் போலே வராதோ

வண்ண வண்ண சொல்லெடுத்து
இங்கு வந்தது செந்தமிழ்பாட்டு
வாசமுள்ள மல்லிகைப்போல் மனம்
தந்தது செந்தமிழ்பாட்டு

No comments:

Post a Comment