தென்பாங்கு காற்றே நீயும் தேர் கொண்டு வா வா
இருகரை மீதிலே தன் நிலை மீறியே
ஒரு நதிபோலே என் நெஞ்சம் அலைமோதுதே
செந்தூரப்பூவே இங்கு தேன் சிந்த வா வா
தென்பாங்கு காற்றே நீயும் தேர் கொண்டு வா வா
வெண்பனி போல கண்களில் ஆடும்
மல்லிகை தோட்டம் கண்டேன்
அழகான வெள்ளைக்கிங்கே கலங்கங்கள் இல்லை
வெண்பனி போல கண்களில் ஆடும்
மல்லிகை தோட்டம் கண்டேன்
அழகான வெள்ளைக்கிங்கே கலங்கங்கள் இல்லை
அதுதானே என்றும் இங்கே நான் தேடும் எல்லை
செந்தூரப்பூவே இங்கு தேன் சிந்த வா வா
தென்பாங்கு காற்றே நீயும் தேர் கொண்டு வா வா
மின்னலைத் தேடும் தாழம்பூவே
உன் எழில் மின்னல் நானே
பனிப்பார்வை ஒன்றே போதும் பசிதீரும் மானே
மின்னலைத் தேடும் தாழம்பூவே
உன் எழில் மின்னல் நானே
பனிப்பார்வை ஒன்றே போதும் பசிதீரும் மானே
உறவாடும் எந்தன் நெஞ்சம் உனக்காகத்தானே
செந்தூரப்பூவே இங்கு தேன் சிந்த வா வா
தென்பாங்கு காற்றே நீயும் தேர் கொண்டு வா வா
அன்னங்கள் போலே எண்ணங்கள் கோடி
ஊர்வலம் போகும் வேளை
நிழல் தேடும் சோலை ஒன்றை விழியோரம் கண்டேன்
அன்னங்கள் போலே எண்ணங்கள் கோடி
ஊர்வலம் போகும் வேளை
நிழல் தேடும் சோலை ஒன்றை விழியோரம் கண்டேன்
நிழலாக நானும் மாற பறந்தோடி வந்தேன்
செந்தூரப்பூவே இங்கு தேன் சிந்த வா வா
தென்பாங்கு காற்றே நீயும் தேர் கொண்டு வா வா
No comments:
Post a Comment