மல்லிகை என் மன்னன் மயங்கும் - Malligai En Mannan Mayangum Lyrics

மல்லிகை என் மன்னன் மயங்கும்
பொன்னான மலரல்லவோ
மல்லிகை என் மன்னன் மயங்கும்
பொன்னான மலரல்லவோ

எந்நேரமும் உன் ஆசைபோல் 
பெண்பாவை நான் பூச்சூடிக்கொள்ளவோ
மல்லிகை என் மன்னன் மயங்கும்
பொன்னான மலரல்லவோ


வான் மேகங்கள் வெள்ளி ஊஞ்சல் போல்
வான் மேகங்கள் வெள்ளி ஊஞ்சல் போல்
திங்கள் மேனியைத் தொட்டுத் தாலாட்டுது
குளிர் காற்றிலே தளிர்ப் பூங்கொடி
கொஞ்சிப் பேசியே அன்பைப் பாராட்டுது
என் கண்ணன் துஞ்சத்தான்
என் நெஞ்சம் மஞ்சம் தான்
கையோடு நான் அள்ளவோ
என் தேவனே உன் தேவி நான்
இவ்வேளையில் உன் தேவை என்னவோ

மல்லிகை என் மன்னன் மயங்கும்
பொன்னான மலரல்லவோ


பொன்மாங்கல்யம் வண்ணப்பூச்சரம்
பொன்மாங்கல்யம் வண்ணப்பூச்சரம்
மஞ்சள் குங்குமம் என்றும் நீ தந்தது
ஓராயிரம் இன்பக்காவியம் 
உந்தன் கண்களில் அள்ளி நான் தந்தது
நம் இல்லம் சொர்க்கம் தான்
நம் உள்ளம் வெள்ளம் தான்
ஒன்றோடு ஒன்றானது
என் சொந்தமும் இந்த பந்தமும்
உன்னோடுதான் நான் தேடிக்கொண்டது

மல்லிகை என் மன்னன் மயங்கும்
பொன்னான மலரல்லவோ

எந்நேரமும் உன் ஆசைபோல் 
பெண்பாவை நான் பூச்சூடிக்கொள்ளவோ
மல்லிகை என் மன்னன் மயங்கும்
பொன்னான மலரல்லவோ

No comments:

Post a Comment