ஆ..ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...
நான் தேடும் செவ்வந்திப்பூவிது
ஒரு நாள் பார்த்து அந்தியில் பூத்தது
பூவோ இது வாசம் போவோம் இனி காதல் தேசம்
பூவோ இது வாசம் போவோம் இனி காதல் தேசம்
நான் தேடும் செவ்வந்திப்பூவிது
ஒரு நாள் பார்த்து அந்தியில் பூத்தது
பறந்து செல்ல வழியில்லையோ
பருவக்குயில் தவிக்கிறதே
சிறகிரண்டும் விரித்துவிட்டேன்
இளமை அது தடுக்கிறதே
பொன்மானே என் யோகந்தான்
பெண்தானோ சந்தேகம் தான்
என் தேவி.. ஆ..ஆ..ஆ. ஆ...
உன் விழி ஓடையில் நான் கலந்தேன்
உன் கனி விழும் என தவம் கிடந்தேன்
பூங்காத்து சூடாச்சு ராஜாவே யார் மூச்சு
நான் தேடும்.. செவ்வந்திப்பூவிது.. ஆ..ஆ..
ஒரு நாள் பார்த்து.. அந்தியில் பூத்தது.. ஆ..ஆ..
மன்றத்தில் என்ன நிலவரமோ
மஞ்சத்தில் விழும் நிலை வருமோ
அன்னத்தை எந்தன் விரல் தொடுமோ
என்றைக்கும் அந்த சுகம் வருமோ
தள்ளாடும் பெண் மேகந்தான்
எந்நாளும் உன் வானம் நான்
என் தேவா... ஆ..ஆ..ஆ..ஆ..
கண்மலர் மூடிட ஏன் தவித்தேன்
என் விரல் நகங்களை தினம் இழந்தேன்
தாலாட்டுப் பாடாமல் தூங்காது என் கிள்ளை
நான் தேடும்.. செவ்வந்திப்பூவிது.. ஆ..ஆ..
ஒரு நாள் பார்த்து.. அந்தியில் பூத்தது.. ஆ..ஆ..
பூவோ இது வாசம் போவோம் இனி காதல் தேசம்
பூவோ இது வாசம் போவோம் இனி காதல் தேசம்
நான் தேடும்.. செவ்வந்திப்பூவிது.. ஆ..ஆ..
ஒரு நாள் பார்த்து.. அந்தியில் பூத்தது.. ஆ..ஆ..
No comments:
Post a Comment