வானத்த பாத்தேன் பூமிய பாத்தேன் - Vaanatha Paathen Boomiya Paathen Lyrics

வானத்த பாத்தேன் பூமிய பாத்தேன்
மனுசன இன்னும் பார்க்கலயே
வானத்த பாத்தேன் பூமிய பாத்தேன்
மனுசன இன்னும் பார்க்கலயே
அட பலநாள் இருந்தேன் உள்ள
அந்த நிம்மதி இங்கில்ல

உள்ளபோன அத்தன பேரும் குத்தவாளி இல்லீங்க
வெளிய உள்ள அத்தன பேரும் புத்தன் காந்தி இல்லீங்க

வானத்த பாத்தேன் பூமிய பாத்தேன்
மனுசன இன்னும் பார்க்கலயே


குரங்கிலிருந்து பிறந்தானா குரங்கை மனிதன் பெற்றானா
யாரை கேள்வி கேட்பது டார்வின் இல்லயே
கடவுள் மனிதனை படைத்தானா
கடவுளை மனிதன் படைத்தானா
ரெண்டு பேரும் இல்லயே ரொம்ப தொல்லையே
அட நான் சொல்வது உண்மை
இதை நீ நம்பினால் நன்மை
அட நான் சொல்வது உண்மை
இதை நீ நம்பினால் நன்மை

வானத்த பாத்தேன் பூமிய பாத்தேன்
மனுசன இன்னும் பார்க்கலயே
அட பலநாள் இருந்தேன் உள்ள
அந்த நிம்மதி இங்கில்ல


சில நாள் இருந்தேன் கருவறையில்
பல நாள் கிடந்தேன் சிறையறையில்
அம்மா எனை ஈன்றது அமாவாசையா
அதனால் பிறந்தது தொல்லையடா
ஆனால் என் மனம் வெள்ளையடா
பட்டபாடு யாவுமே பாடம் தானடா
ஒரு பூந்தோட்டமா வாழ்க்கை
இல்லை போராட்டமே வாழ்க்கை
ஒரு பூந்தோட்டமா வாழ்க்கை
இல்லை போராட்டமே வாழ்க்கை

வானத்த பாத்தேன் பூமிய பாத்தேன்
மனுசன இன்னும் பார்க்கலயே
அட பலநாள் இருந்தேன் உள்ள
அந்த நிம்மதி இங்கில்ல

உள்ளபோன அத்தன பேரும் குத்தவாளி இல்லீங்க
வெளிய உள்ள அத்தன பேரும் புத்தன் காந்தி இல்லீங்க

வானத்த பாத்தேன் பூமிய பாத்தேன்
மனுசன இன்னும் பார்க்கலயே
அட பலநாள் இருந்தேன் உள்ள
அந்த நிம்மதி இங்கில்ல
அந்த நிம்மதி இங்கில்ல

No comments:

Post a Comment