எங்கே அந்த வெண்ணிலா - Enge Antha Vennilaa Lyrics

னானா னன னானனா..
னானா னன னானனா..

எங்கே அந்த வெண்ணிலா எங்கே அந்த வெண்ணிலா
எங்கே அந்த வெண்ணிலா எங்கே அந்த வெண்ணிலா
கல்லை கனியாக்கினாள் முள்ளை மலராக்கினாள்
எங்கே அந்த வெண்ணிலா

எங்கே அந்த வெண்ணிலா எங்கே அந்த வெண்ணிலா

தையாரே தையத்தையத் தையா....
தையாரே தையத்தையத் தையா....
தையாரே தையா தையா தையாரே தையா தையா..
தையாரே தையத்தையத் தையாரே தைய தையய்யா..


தரையில் நடந்த நான் வானில் பறக்கிறேன்
உன்னால் தானம்மா.. ஆ.... உன்னால் தானம்மா..
இரவாய் இருந்த நான் பகலாய் மாறினேன்...
உன்னால் தானம்மா.. ஆ.... உன்னால் தானம்மா..

எனக்கென இருந்தது ஒரு மனசு
அதை உனக்கென கொடுத்தது சுகம் எனக்கு
எனக்கென இருப்பது ஒரு உசுரு 
அதை உனக்கென தருவது வரம் எனக்கு
நீ மறந்தாலென்ன மறுத்தாலென்ன 
நீ தான் எந்தன் ஒளிவிளக்கு
என்றும் நீ தான் எந்தன் ஒளிவிளக்கு

எங்கே அந்த வெண்ணிலா எங்கே அந்த வெண்ணிலா

யா.. யாயி யாயே.. யாயி யா.. யாயியா..
யா.. யாயி யாயே.. யாயி யா.. யாயியா..
யாயி யா.. யாயியா..


மழையில் நனைகிறேன் குடையாய் வருகிறாய்
வெயிலில் நடக்கிறேன் நிழலாய் வருகிறாய்
தாகம் என்கிறேன் நீராய் வருகிறாய்
சோகம் என்கிறேன் தாயாய் வருகிறாய்
நதிகளில் மீன்கள் நீந்துதம்மா 
அதில் நதிக்கொரு வலியும் இல்லையம்மா
உன் நினைவுகள் இதயத்தில் நீந்துதம்மா
அதில் எனக்கொரு வலியும் இல்லையம்மா
நீ இருந்தாலென்ன பிரிந்தாலென்ன 
காதல் எனக்கு போதுமம்மா
என் காதல் எனக்கு போதுமம்மா

எங்கே அந்த வெண்ணிலா எங்கே அந்த வெண்ணிலா
கல்லை கனியாக்கினாள் முள்ளை மலராக்கினாள்
எங்கே அந்த வெண்ணிலா..

No comments:

Post a Comment