இதயம் ஒரு கோயில் அதில் உதயம் ஒரு பாடல்
இதயம் ஒரு கோயில் அதில் உதயம் ஒரு பாடல்
இதில் வாழும் தேவி நீ
இசையை மலராய் நாளும் சூட்டுவேன்
இசையை மலராய் நாளும் சூட்டுவேன்
இதயம் ஒரு கோயில் அதில் உதயம் ஒரு பாடல்
ல..ல..ல...ல...ல..ல..ல..ல...ல...ல..ல...ல
ல..ல..ல...ல...ல..ல..ல..ல...ல...ல..ல...ல
ஆத்ம ராகம் ஒன்றில் தான் ஆடும் உயிர்கள் என்றுமே
உயிரின் ஜீவ நாடியே நாதம் தாளம் ஆனதே
உயிரில் கலந்து பாடும்போது எதுவும் பாடலே
பாடல்கள் ஒரு கோடி எதுவும் புதிதில்லை
ராகங்கள் கோடி கோடி அதுவும் புதிதில்லை
எனது ஜீவன் நீ தான் என்றும் புதிது
இதயம் ஒரு கோயில் அதில் உதயம் ஒரு பாடல்
இதில் வாழும் தேவி நீ
இசையை மலராய் நாளும் சூட்டுவேன்
இதயம் ஒரு கோயில் அதில் உதயம் ஒரு பாடல்
காமம் தேடும் உலகிலே கீதம் என்னும் தீபத்தால்
ராம நாமம் மீதிலே நாதத்தியாகராஜரும்
ஊனை உருக்கி உயிரில் விளக்கை ஏற்றினாரம்மா
அவர் பாடலில் ஜீவன் அதுவே அவரானார்
என் பாடலில் ஜீவன் எதுவோ அது நீயே
நீயும் நானும் ஒன்று தான் எங்கே பிரிவது
இதயம் ஒரு கோயில் அதில் உதயம் ஒரு பாடல்
நீயும் நானும் போவது காதல் என்னும் பாதையில்
சேரும் நேரம் வந்தது மீதி தூரம் பாதியே
பாதை ஒன்று ஆனபோதும் திசைகள் வேறம்மா
எனது பாதை வேறு உனது பாதை வேறம்மா
மீராவின் கண்ணன் மீராவிடமே
எனதாருயிர் ஜீவன் எனை ஆண்டாளே
வாழ்க என்றும் வளமுடன் என்றும் வாழ்கவே
இதயம் ஒரு கோயில் அதில் உதயம் ஒரு பாடல்
இதில் வாழும் தேவி நீ
இசையை மலராய் நாளும் சூட்டுவேன்
No comments:
Post a Comment