ஒக்காந்து பேசலாமா
கொஞ்சம் ஒக்காந்து பேசலாமா
சிட்டாகப் பறக்கும் பொன்னான மயிலே
தப்பாக எண்ணலாமா
என்ன தப்பாக எண்ணலாமா
எண்ணம் போல வந்த வாழ்வு
இந்த நேரம் வந்தபோது
குத்தாலக் குயிலே குத்தாலக் குயிலே
ஒக்காந்து பேசலாமா
கொஞ்சம் ஒக்காந்து பேசலாமா
போகாத பள்ளியறை ஏதேதோ பாடம் தர
கேட்டேன் நானும் சந்தோசமா
வேண்டாத சாமியில்ல வேறேதும் நாதியில்ல
வேண்டும் பாவி நான் தானம்மா
வாராத எண்ணமில்ல கூடாத வண்ணமில்ல
வாம்மா மாமன் கையோரமா
பூமாலை கட்டவில்ல பொன்னாரம் பூட்டவில்ல
ஏம்மா கூட நாளாகுமா
ஒன்னும் ஒன்னும் சேர்ந்து ஒன்னாகும்
ரெண்டு விழி பார்வை ஒன்னாகும்
காத்திருக்கும் நேரம் என்னாகும்
காதல் எனும் நோயில் புண்ணாகும்
மொழி நீதானம்மா சொல்ல நான் தானம்மா
கேட்டேனம்மா விட மாட்டேனம்மா
ஆ..ஹா ஹா.. ஆஹா.. ஆ..ஹா ஆ ஹா ஹா.... ஆ...
குத்தாலக் குயிலே குத்தாலக் குயிலே
ஒக்காந்து பேசலாமா
கொஞ்சம் ஒக்காந்து பேசலாமா
ஒக்காந்து பேசலாமா
கொஞ்சம் ஒக்காந்து பேசலாமா
ஏழேழு ஜென்மத்தொட்டு இல்லாத வண்ணந்தொட்டு
நானே செய்த பொன்னோவியம்
வாழ்நாளில் இன்பம் தந்து ஆனந்தம் கொண்டு வந்து
வாழ்வோம் என்ற வாழ்த்தும் சொல்லும்
ஏடோடு வந்த சொந்தம் எப்போதோ தந்த பந்தம்
இன்றும் என்றும் ஒன்றானது
பூவொன்று மாலை என்று தோளோடு சூடிக்கொண்டு
பூட்டும் காலம் உண்டானது
எட்டுத்திசை எங்கெங்கும் கொண்டாட
கொட்டி வந்து நம் காதல் பண்பாட
ஒட்டும் வண்ணப்பூவோடு பட்டாட
புன்னகையில் உன் மோகம் தொட்டாட
இந்த நாள் தானம்மா உந்தன் ஆள் நானம்மா
தேன் நீயம்மா அந்த மான் தானம்மா
ஆ..ஹா ஹா.. ஆஹா.. ஆ..ஹா ஆ ஹா ஹா.... ஆ...
குத்தாலக் குயிலே குத்தாலக் குயிலே
ஒக்காந்து பேசலாமா
கொஞ்சம் ஒக்காந்து பேசலாமா
எண்ணம் போல வந்த வாழ்வு
இந்த நேரம் வந்தபோது
குத்தாலக் குயிலே குத்தாலக் குயிலே
ஒக்காந்து பேசலாமா
கொஞ்சம் ஒக்காந்து பேசலாமா
ஒக்காந்து பேசலாமா
கொஞ்சம் ஒக்காந்து பேசலாமா
kannada song ninane benkiyalli thampu kandenu tamil lyrics podavum
ReplyDeletemovie name : manemachide kudigi