கண்டேன் உனை நானே
கண்ணே கலைமானே கன்னிமயிலென
கண்டேன் உனை நானே
அந்திப்பகல் உனை நான் பார்க்கிறேன்
ஆண்டவனை இதைத்தான் கேட்கிறேன்
ராரி ராரோ.. ஓ. ராரிரோ
ராரி ராரோ.. ஓ. ராரிரோ
கண்ணே கலைமானே கன்னிமயிலென
கண்டேன் உனை நானே
ஊமை என்றால் ஒரு வகை அமைதி
ஏழை என்றால் அதில் ஒரு அமைதி
நீயோ கிளிப்பேடு பண்பாடும் ஆனந்த குயில்பேடு
ஏனோ தெய்வம் சதி செய்தது பேதை போல விதி செய்தது
கண்ணே கலைமானே கன்னிமயிலென
கண்டேன் உனை நானே
அந்திப்பகல் உனை நான் பார்க்கிறேன்
ஆண்டவனை இதைத்தான் கேட்கிறேன்
ராரி ராரோ.. ஓ. ராரிரோ
ராரி ராரோ.. ஓ. ராரிரோ
காதல் கொண்டேன் கனவினை வளர்த்தேன்
கண்மணி உனை நான் கருத்தினில் நிறைத்தேன்
உனக்கே உயிரானேன் எந்நாளும் எனை நீ மறவாதே
நீயில்லாமல் எது நிம்மதி நீ தான் என்றும் என் சந்நிதி
கண்ணே கலைமானே கன்னிமயிலென
கண்டேன் உனை நானே
அந்திப்பகல் உனை நான் பார்க்கிறேன்
ஆண்டவனை இதைத்தான் கேட்கிறேன்
ராரி ராரோ.. ஓ. ராரிரோ
ராரி ராரோ.. ஓ. ராரிரோ
ராரி ராரோ.. ஓ. ராரிரோ
ராரி ராரோ.. ஓ. ராரிரோ
நன்றி: கண்ணதாசன்
No comments:
Post a Comment