கண்மணி அன்போடு காதலன் - Kanmani Anbodu Kathalan Lyrics

கண்மணி அன்போட காதலன் ஆ.. 
நான் நான்
நான் ம்.. 
எழுதும் எழுதும் 
கடிதம் லெட் சே.. 
கடுதாசி.. இல்ல கடிதமே இருக்கட்டும்... ஆ.. கடிதம்

படி.. 

கண்மணி அன்போடு காதலன்
நான் எழுதும் கடிதமே.. 

பாட்டாவே படிச்சிட்டியா.. 
அப்ப நானும் மொதல்ல கண்மணி சொன்னேன்ல.. 
இங்க பொன்மணி போட்டுக்க
பொன்மணி உன் வீட்டுல சௌக்கியமா
நான் இங்கே சௌக்கியம்

பொன்மணி உன் வீட்டில் சௌக்கியமா
நான் இங்கு சௌக்கியமே

ஆ.. ஒன்ன நெனச்சு பாக்கும்போது கவித 
மனசுல அருவி மாரி கொட்டுது
ஆனா அத எழுதணும்னு ஒக்காந்தா 
அந்த எழுத்து தான் வார்த்தை... ம்ஹூம்..

உன்னை எண்ணி பார்க்கையில் கவிதை கொட்டுது.. அதான்
அதை எழுத நினைக்கையில் வார்த்தை முட்டுது..
அதேதான்.. ஆஹா.. ப்ரம்மாதம் கவித கவித படி..

கண்மணி அன்போடு காதலன்
நான் எழுதும் கடிதமே
பொன்மணி உன் வீட்டில் சௌக்கியமா
நான் இங்கு சௌக்கியமே
உன்னை எண்ணி பார்க்கையில் கவிதை கொட்டுது.. 
அதை எழுத நினைக்கையில் வார்த்தை முட்டுது..

ஓ...ஹோ...கண்மணி அன்போடு காதலன்
நான் எழுதும் கடிதமே

லாலலா லால்லால லாலலா லால்லால லாலலா

பொன்மணி உன் வீட்டில் சௌக்கியமா
நான் இங்கு சௌக்கியமே

லாலலா லால்லால லாலலா லால்லால லாலலா


ம்.. எனக்கு உண்டான காயம் அது தன்னால ஆறிடும்
அது என்னமோ தெரியல என்ன மாயமோ தெரியல
எனக்கு ஒன்னுமே ஆவறதில்ல...

இதயும் எழுதிக்க..
நடுவுல நடுவுல மானே தேனே பொன்மானே 
இதெல்லாம் போட்டுக்கணும்..

இத பாரு.. எனக்கு என்ன காயம்ன்னாலும் என் ஒடம்பு தாங்கிடும்
ஒன் ஒடம்பு தாங்குமா.. தாங்காது.. அபிராமி அபிராமி அபிராமி....

அதையும் எழுதணுமா.. அஹா.. 

இது காதல்.. என் காதல் என்னான்னு சொல்லாம
ஏங்க ஏங்க அழுகையா வருது
ஆனா நான் அழுது என் சோகம் ஒன்னத் தாக்கிடுமோ
அப்டின்னு நெனைக்கும்போது வர்ற அழுகை கூட நின்னுடுது

ஹா.. ஹா.. ஹா...

மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதல் அல்ல
அதையும் தாண்டி புனிதமானது 
புனிதமானது புனிதமானது புனிதமானது புனிதமானது


உண்டான காயமெங்கும் தன்னாலே மாறிப்போன மாயமென்ன
பொன்மானே பொன்மானே...
என்ன காயம் ஆனபோதும் என்மேனி தாங்கிக் கொள்ளும்
உந்தன் மேனி தாங்காது செந்தேனே...

எந்தன் காதல் என்னவென்று 
சொல்லாமல் ஏங்க ஏங்க அழுகை வந்தது
எந்தன் சோகம் உன்னைத்தாக்கும் என்றெண்ணும்போது
வந்த அழுகை நின்றது...

மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதல் அல்ல
அதையும் தாண்டி புனிதமானது


அபிராமியே.. தாலாட்டும் சாமியே
நான் தானே தெரியுமா..
சிவகாமியே சிவனில் நீயும் பாதியே
அதுவும் உனக்கு புரியுமா...
சுபலாலி லாலியே லாலி லாலியே
அபிராமி லாலியே லாலி லாலியே..

அபிராமியே.. தாலாட்டும் சாமியே
நான் தானே தெரியுமா..
உனக்கு புரியுமா...

லால்ல லா லால்லால லால்ல லா லால்லால லால்ல லா.... 
லால்ல லா லால்லால லால்ல லா லால்லால லால்ல லா.... 

லால்ல லால்ல லால்ல லா லால்ல லால்ல லா
லல லால்ல லால்ல லா லால்ல லால்ல லா

ஓ.. ஹோ..
லால்ல லா லால்லால லால்ல லா லால்லால லால்ல லா.... 
லால்ல லா லால்லால லால்ல லா லால்லால லால்ல லா.... 

லால்ல லால்ல லால்ல லா லால்ல லால்ல லா
லல லால்ல லால்ல லா லால்ல லால்ல லா

No comments:

Post a Comment