கதைப்போமா கதைப்போமா - Kathaipomaa Kathaipomaa Lyrics

தினனா தினனா தினனா..ஆ...
தினனா தினனா தினனா..
தனனம் தனனம் தனனம் தன.. தரிகிட தானானா..

தினனா தினனா தினனா..ஆ...
தினனா தினனா தினனா..
தனனம் தனனம் தனனம் தன.. தரிகிட தானானா..
தனனம் தனனம் தனனம் தன.. தரிகிட தாரரா..

ம்....ம்.... ம்....ம்....
நேற்று நான் உன்னைப் பார்த்த பார்வை வேறு
நீங்காத எண்ணம் ஆக ஆனாய் இன்று
உன்னோடு நானும் போன தூரம் யாவும் நெஞ்சிலே
நீங்காத நினைவுகளாக அணையை இங்கே மிஞ்சுதே
நூலறுந்த பட்டம் போலே
உன்னைச் சுற்றி நானும் ஆட
கைகள் நீட்டி நீயும் பிடிக்க காத்திருக்கிறேன்..
இதற்கெல்லாம் அர்த்தங்கள் என்ன
கேட்க வேண்டும் உன்னை
காலம் கைகூடினால்.....

கதைப்போமா...கதைப்போமா... கதைப்போமா... ஆ...
ஒன்றாக நீயும் நானும் தான்
கதைப்போமா...கதைப்போமா... கதைப்போமா... ஆ...
நீ பேசப்  பேச காயம் ஆறுமே...


அதிகாலை வந்தால்
அழகாய் என் வானில் நீ
அணையாத சூரியன் ஆகிறாய்
நெடுநேரம் காய்ந்து
கதகதப்பு தந்தவுடன்
நிலவாய் உருமாறி நிற்க்கிறாய்

உன்னை இன்று பார்த்ததும்
என்னை நானே கேட்கிறேன்
வைரம் ஒன்றை கையில் வைத்து
எங்கே தேடி அலைந்தாயோ..
உண்மை என்று தெரிந்துமே
நெஞ்சம் சொல்லத் தயங்குதே
கைகள் கோர்த்து பேசினாலே தைரியங்கள் தோன்றுமே

கதைப்போமா...கதைப்போமா...  கதைப்போமா... ஆ...
ஒன்றாக நீயும் நானும் தான்
கதைப்போமா...கதைப்போமா...  கதைப்போமா... ஆ...
நீ பேசப்  பேச காயம் ஆறுமே...

கதைப்போமா...கதைப்போமா... கதைப்போமா... ஆ...

No comments:

Post a Comment