கல்யாணமாலை கொண்டாடும் பெண்ணே - Kalyanamaalai Kondaadum Penne Lyrics

கல்யாணமாலை கொண்டாடும் பெண்ணே
என் பாட்டைக் கேளு உண்மைகள் சொன்னேன்
கல்யாணமாலை கொண்டாடும் பெண்ணே
என் பாட்டைக் கேளு உண்மைகள் சொன்னேன்
ஸ்ருதியோடு லயம் போலவே... 
இணையாகும் துணையாகும் சம்சார சங்கீதமே...

கல்யாணமாலை கொண்டாடும் பெண்ணே
என் பாட்டைக் கேளு உண்மைகள் சொன்னேன்


வாலிபங்கள் ஓடும் வயதாகக் கூடும்
ஆனாலும் அன்பு மாறாதது
மாலையிடும் சொந்தம் முடி போட்ட பந்தம்
பிரிவென்னும் சொல்லே அறியாதது
அழகான மனைவி அன்பான துணைவி
அமைந்தாலே பேரின்பமே.... ஏ.....
மடிமீது துயில சரசங்கள் பயில
மோகங்கள் ஆரம்பமே.... ஏ.....
நல்ல மனையாளின் நேசம் ஒரு கோடி
செஞ்சம் எனும் வீணை பாடுமே தோடி

சபாஷ் வாலி... கட் இட்...  சாரி சார்...

நல்ல மனையாளின் நேசம் ஒரு கோடி
செஞ்சம் எனும் வீணை பாடுமே தோடி
சந்தோச சாம்ராஜ்யமே.... ஏ.....

கல்யாணமாலை கொண்டாடும் பெண்ணே
என் பாட்டைக் கேளு உண்மைகள் சொன்னேன்
ஸ்ருதியோடு லயம் போலவே... 
இணையாகும் துணையாகும் சம்சார சங்கீதமே...
கல்யாணமாலை கொண்டாடும் பெண்ணே
என் பாட்டைக் கேளு உண்மைகள் சொன்னேன்

ம்...ம்..ம்..ம்..ம்...ம்...ம்...ம்...ம்...
ம்...ம்..ம்..ம்..ம்...ம்...ம்...ம்...ம்...


கூவுகின்ற குயிலை கூட்டுக்குள் வைத்து
பாடென்று சொன்னால் பாடாதம்மா...
சோலைமயில் தன்னை சிறை வைத்து பூட்டி
ஆடென்று சொன்னால் ஆடாதம்மா...
நாள்தோறும் ரசிகன் பாராட்டும் கலைஞன்
காவல்கள் எனக்கில்லையே....... ஏ.....
சோகங்கள் எனக்கும் நெஞ்சோடு இருக்க
சிரிக்காத நாளில்லையே........ ஏ.....
துக்கம் சில நேரம் பொங்கி வரும் போதும்
மக்கள் மனம் போலே பாடுவேன் கண்ணே
என் சோகம் என்னோடு தான்... ..

கல்யாணமாலை கொண்டாடும் பெண்ணே
என் பாட்டைக் கேளு உண்மைகள் சொன்னேன்
ஸ்ருதியோடு லயம் போலவே... 
இணையாகும் துணையாகும் சம்சார சங்கீதமே...

கல்யாணமாலை கொண்டாடும் பெண்ணே
என் பாட்டைக் கேளு உண்மைகள் சொன்னேன்

ம்...ம்..ம்..ம்..ம்...ம்...ம்...ம்...ம்...

No comments:

Post a Comment