வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ
வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ
விண்ணிலே பாதை இல்லை
உன்னைத் தொட ஏணி இல்லை
விண்ணிலே பாதை இல்லை
உன்னைத் தொட ஏணி இல்லை
வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ
வண்ணம் கொண்ட வெண்ணிலவே
பக்கத்தில் நீயும் இல்லை
பார்வையில் ஈரம் இல்லை
சொந்தத்தில் பாஷை இல்லை
சுவாசிக்க ஆசை இல்லை
பக்கத்தில் நீயும் இல்லை
பார்வையில் ஈரம் இல்லை
சொந்தத்தில் பாஷை இல்லை
சுவாசிக்க ஆசை இல்லை
கண்டு வந்து சொல்வதற்கு
காற்றுக்கு ஞானம் இல்லை
நீலத்தை பிரித்து விட்டால்
வானத்தில் ஏதும் இல்லை
தள்ளி தள்ளி நீ இருந்தால்
சொல்லிக் கொள்ள வாழ்க்கை இல்லை
வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ
வண்ணம் கொண்ட வெண்ணிலவே
நங்கை உந்தன் கூந்தலுக்கு
நட்சத்திரப் பூ பறித்தேன்
நங்கை வந்து சேரவில்லை
நட்சத்திரம் வாடுதடி
நங்கை உந்தன் கூந்தலுக்கு
நட்சத்திரப் பூ பறித்தேன்
நங்கை வந்து சேரவில்லை
நட்சத்திரம் வாடுதடி
கன்னி உன்னைப் பார்த்திருப்பேன்
கால் கடுக்கக் காத்திருப்பேன்
ஜீவன் வந்து சேரும் வரை
தேகம் போல் நான் கிடப்பேன்
தேவி வந்து சேர்ந்து விட்டால்
ஆவி கொண்டு நான் நடப்பேன்
வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ
விண்ணிலே பாதை இல்லை
உன்னைத் தொட ஏணி இல்லை
வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ
வண்ணம் கொண்ட வெண்ணிலவே
நன்றி: வைரமுத்து
No comments:
Post a Comment