நடந்தால் இரண்டடி இருந்தால் நான்கடி - Nadanthal Irandadi Irunthal Lyrics

நடந்தால் இரண்டடி இருந்தால் நான்கடி
நடந்தால் இரண்டடி இருந்தால் நான்கடி
படுத்தால் ஆறடி போதும்...
இந்த நிலவும் அந்த வானமும்
அது எல்லோர்க்கும் சொந்தம்
அடி சொல்லடி ஞானப்பெண்ணே
உண்மை சொல்லடி ஞானப்பெண்ணே
சொல்லடி ஞானப்பெண்ணே
உண்மை சொல்லடி ஞானப்பெண்ணே

நடந்தால் இரண்டடி இருந்தால் நான்கடி
நடந்தால் இரண்டடி இருந்தால் நான்கடி


றெக்கை உள்ள குஞ்சு இது
கூடு ஒன்னும் தேவையில்லை
புத்தி உள்ள பிள்ளை இது
கெட்டு நிக்க போவதில்லை
தாயொருத்தி இருந்தா ஒரு தந்தையுண்டு கேளம்மா
தந்தை ஒன்னு இருந்தா பெத்த பாட்டியின்றி போகுமா
தெருவோரம் கிடந்தும் அனாதையில்லை
உறவென்னை வெறுத்தால் தினம் தருவேன் தொல்லை
கெட்டாலும் பட்டாலும் உன் பேரன் தான்
என்னடி ஞானப்பெண்ணே
உண்மை சொல்லடி ஞானப்பெண்ணே

நடந்தால் இரண்டடி இருந்தால் நான்கடி
நடந்தால் இரண்டடி இருந்தால் நான்கடி


ஆனை கட்டி போரடித்த அப்பன் சுப்பன் காணவில்லை
அன்று முதல் இன்று வரை அக்கரமும் வாழவில்லை
வெட்ட வெட்ட வாழைதான்
அது அள்ளித்தரும் வாழ்வைத்தான்
வெட்டிப்போட்ட மண்ணுதான்
அதை கட்டிக் காத்தா பொன்னுதான்
நாம் வாழும் வாழ்வே அது சில காலம் தான்
உறவோடு வாழ்ந்தால் அது பூக்கோலம் தான்
கெட்டாலும் பட்டாலும் உன் பேரன் தான்
என்னடி ஞானப்பெண்ணே
உண்மை சொல்லடி ஞானப்பெண்ணே

நடந்தால் இரண்டடி இருந்தால் நான்கடி
நடந்தால் இரண்டடி இருந்தால் நான்கடி
படுத்தால் ஆறடி போதும்...
இந்த நிலவும் அந்த வானமும்
அது எல்லோர்க்கும் சொந்தம்
அடி சொல்லடி ஞானப்பெண்ணே
உண்மை சொல்லடி ஞானப்பெண்ணே
சொல்லடி ஞானப்பெண்ணே
உண்மை சொல்லடி ஞானப்பெண்ணே

நடந்தால் இரண்டடி இருந்தால் நான்கடி
நடந்தால் இரண்டடி இருந்தால் நான்கடி

No comments:

Post a Comment