மொரட்டு முயல தூக்கிப் போக வந்த பயடா நீ
கரட்டுக் காட கெடந்த என்ன திருட்டு முழிக்காரா
தொரட்டி போட்டு இழுக்குறடா நீ
திருட்டு பூனை போல என்ன உருட்டி உருட்டி பாத்து
சுருட்ட பாம்பா ஆக்கிப்புட்ட நீ
என் முந்தியில சொருகி வச்ச சில்லரைய போல நீ
இடுப்பு மடிப்பில் என்னென்னமோ செஞ்சுப்புட்டு போற நீ
பாரங்கல்ல இருந்த என்ன பஞ்சு போல ஆக்கிப்புட்ட
என்ன வித்த வச்சுருக்க நீ
யான பசி நான் உனக்கு யான பசி
சோள பொரி நீ எனக்கு சோள பொரி
லல்லாயி லாயிரே லாயிரே..ஏ..
லல்லாயி லாயிரே லாயிரே..ஏ..
லல்லாயி லாயிரே லாயிரே..ஏ..
பாசத்தால என்ன நீயும் பதற வைக்கிற
பத்திக்கிட்டு எரியும் என்ன பாத்து நிக்கிற
ஜிகருதண்டா பார்வையால குளிர வைக்கிற
தூரம் நின்னே என் மனச மேய வைக்கிற
நான் வெளஞ்சு நிக்கும் பொம்பள
வெட்கம் கெட்டு நிக்கிறேன்
உச்சு கொட்ட வைக்கிறியே வாடா
நீ எச்சி ஊற வைக்கிற என் ஒடம்ப தைக்கிற
எதுக்கு தள்ளி நிக்கிற வாடா
நான் சாமத்துல முழிக்கிறேன்
சாரப்பாம்பா நெளியிறேன்
என்ன செஞ்ச என்ன நீ கொஞ்சம் சொல்லுடா
உன் மொரட்டு ஆச எனக்கு தான்
அதுவும் தெரியும் உனக்கு தான்
என்ன செய்ய ஒன்ன
தின்னு தீக்க போறேன்
கொஞ்சம் கொஞ்சமாக
கொஞ்சி கொல்லப் போறேன்
வீச்சருவா இல்லாமலே வெட்டி சாய்க்கிற
வேலுக்கம்பு வார்த்தயால குத்தி கிழிக்கிற
சூதனமா அங்க இங்க கிள்ளி வைக்கிற
சூசகமா ஆசையெல்லாம் சொல்லி வைக்கிற
நீ தொட்டு பேசு சீக்கிரம்
விட்டு போகும் என் ஜூரம்
வெட்டி கத பேசவேணா வாடா
நான் ஓலப்பாய விரிக்கிறேன்
ஒனக்கு விருந்து வைக்கிறேன்
முழுசா என்ன தின்னுபுட்டு போடா
நீ எதுக்கு தயங்கி நிக்கிற
என்ன ஒதுக்கி வைக்கிற
சும்மா மொரண்டு பிடிக்கிற கட்டி அள்ளுடா
உன் மொரட்டு திமிரு எனக்கு தான்
அதுவும் தெரியும் உனக்கு தான்
பொத்தி வச்ச ஆச பொங்குதடா உலையா
பொத்துகிட்டு ஊத்த போகுதடா மழையா
லல்லாயி லாயிரே லாயிரே..ஏ..
லல்லாயி லாயிரே லாயிரே..ஏ..
லல்லாயி லாயிரே லாயிரே..ஏ..
No comments:
Post a Comment