போராளே பொன்னுத்தாயி - Poraale Ponnuthaayi Pola Pola Lyrics

ஓ.. ஓ.. ஓ.. ஓ..
ஆ.. ஆ...ஆ.. ஆ.. ஆ..

போராளே பொன்னுத்தாயி
பொல பொலவென்று கண்ணீர் விட்டு
தண்ணீருஞ் சோறுந்தந்த மண்ண விட்டு
பால் பீச்சும் மாட்ட விட்டு
பஞ்சாரத்து கோழிய விட்டு
போராளே பொட்டபுள்ள ஊரவிட்டு

சாமந்திப் பூவா ஊமத்தம் பூவா
கருத்தம்மா எந்தப் பூவம்மா...ஆ...
அஞ்சாரு சீவே உள்ளூரில் ஏங்க
பொதிமாட்டு வண்டி மேலே போட்டு வச்ச மூட்ட போல

போராளே பொன்னுத்தாயி
பொல பொலவென்று கண்ணீர் விட்டு
தண்ணீருஞ் சோறுந்தந்த மண்ண விட்டு


நீ வச்ச பாசம் நீ சொன்ன நேசம்... 
கடைசியில் ஊமையும் ஊமையும் பேசிய பாஷையடி
தெக்கத்திக் காத்து தெசமாறி வீச
ஒன்னான மேகம் ஓடுதடி ஓடுதடி
உசுருள்ள நாத்து ஒன்னு வாடுதடி வாடுதடி
கடைசியில சாமிக்கு நேந்தது
சாதிக்கு ஆனதடி

போராளே பொன்னுத்தாயி
பொல பொலவென்று கண்ணீர் விட்டு
தண்ணீருஞ் சோறுந்தந்த மண்ண விட்டு
பால் பீச்சும் மாட்ட விட்டு
பஞ்சாரத்து கோழிய விட்டு
போராளே பொட்டபுள்ள ஊரவிட்டு

ஓ.. ஓ.. ஓ.. ஓ..
ஆ.. ஆ...ஆ.. ஆ.. ஆ..


நெஞ்சுக்குழி காஞ்சு நெடுங்காலம் ஆச்சு
ஒரு உயிர் வீட்டுக்கும் காட்டுக்கும் கூட்டுக்குள் இழுக்குதம்மா
சேமிச்ச காசு செல்லாம போச்சு
சொல்லாத சொல்லு பாரமம்மா பாரமம்மா
சோத்துக்கும் சொந்தத்துக்கும் தூரமம்மா
பொறு பொறு ஏழைக்கும் வாழைக்கும் நாளைக்கும் நன்மையம்மா

போராளே பொன்னுத்தாயி
பொல பொலவென்று கண்ணீர் விட்டு
தண்ணீருஞ் சோறுந்தந்த மண்ண விட்டு
பால் பீச்சும் மாட்ட விட்டு
பஞ்சாரத்து கோழிய விட்டு
போராளே பொட்டபுள்ள ஊரவிட்டு.... 

உ.. உ.....உ....உ....உ...

நன்றி: வைரமுத்து

No comments:

Post a Comment