சம்சாரம் அது மின்சாரம் - Samsaram Athu Minsaram Lyrics

சம்சாரம் அது மின்சாரம்
சம்சாரம் அது மின்சாரம்
அன்பு கொள்ள யாரும் இல்ல
எந்த நெஞ்சும் ஈரம் இல்ல சம்சாரம்...
பந்தம் இல்ல பாசம் இல்ல
சொந்தம் இங்கு சொந்தம் இல்ல சம்சாரம்...
நேரம் வந்து நெருங்கி தொட்டா சாக்கடிக்கிற மின்சாரம்

சம்சாரம் அது மின்சாரம்
சம்சாரம் அது மின்சாரம்

அப்பன் என்ன ஆத்தா என்ன ஒப்புக்கு தானடி
பாராங்கல்ல பெத்துபுட்டா பாசம் ஏதடி
பெத்தபுள்ள தந்த பணம் உப்புக்கு ஆகுமா
தாய்ப்பாலுக்கு கணக்கு போட்டா தாலி மிஞ்சுமா
வாயக்கட்டி வளர்த்த புள்ள மல்லுக்கட்டி நிக்குதடி
வாங்கித்தந்த காசுக்கெல்லாம் வட்டி கட்ட சொல்லுதடி
கோடு ஒன்னு கிழிக்க வச்சு கும்மி அடிக்குது அம்மாடி

சம்சாரம் அது மின்சாரம்
சம்சாரம் அது மின்சாரம்
அன்பு கொள்ள யாரும் இல்ல
எந்த நெஞ்சும் ஈரம் இல்ல சம்சாரம்...
பந்தம் இல்ல பாசம் இல்ல
சொந்தம் இங்கு சொந்தம் இல்ல சம்சாரம்...
நேரம் வந்து நெருங்கி தொட்டா சாக்கடிக்கிற மின்சாரம்

சம்சாரம் அது மின்சாரம்
சம்சாரம் அது மின்சாரம்


காலில் ஒரு முள்ளு தச்சா கண்ணு கலங்குது
கண்ணில் ஒரு தூசு பட்டா கைதான் ஓடுது
சேவல் அன்று கோடு கிழிச்சு வேலி போட்டது
வேலி தாண்டி கோழி போக வேளை வந்தது
அக்கம் பக்கம் யாருமில்ல ஆபத்துக்கு பாவமில்ல
பாசத்துக்கு சட்டமில்ல மீறுவது குத்தமில்ல
பாசத்துக்கு றெக்க மொளச்சு பறந்து போகுது தன்னால

சம்சாரம் அது மின்சாரம்
சம்சாரம் அது மின்சாரம்
அன்பு கொள்ள ஆளுமுண்டு
நெஞ்சுக்குள்ள ஈரமுண்டு சம்சாரம்
பந்தமுண்டு பாசமுண்டு 
சொந்தத்துக்கும் உள்ளமுண்டு சம்சாரம்
சூட்சமத்த தெரிஞ்சுகிட்டா ஒளி கொடுக்கிற மின்சாரம்

சம்சாரம் அது மின்சாரம்
சம்சாரம் அது மின்சாரம்


வயசு வந்த புள்ள ஒன்னு பாடம் படிக்குது
அன்பு ஒன்றே வாழ்க்கை என்ற அர்த்தம் வெளங்குது
கட்டிலுக்கு ஆசப்பட்டு புத்தி அலைஞ்சது
கணவன் இங்கே பிள்ளை என்று கண்டு கொண்டது
தன்னடக்கம் வேணுமம்மா பெண்மைக்கது நல்லதம்மா
காமத்துக்கும் மோகத்துக்கும் கால நேரம் உள்ளதம்மா
இல்லறத்தில் இன்ப துன்பம் இரண்டும் உள்ளது பொன்னம்மா

சம்சாரம் அது மின்சாரம்
சம்சாரம் அது மின்சாரம்
அன்பு கொள்ள ஆளுமுண்டு
நெஞ்சுக்குள்ள ஈரமுண்டு சம்சாரம்
பந்தமுண்டு பாசமுண்டு 
சொந்தத்துக்கும் உள்ளமுண்டு சம்சாரம்
சூட்சமத்த தெரிஞ்சுகிட்டா ஒளி கொடுக்கிற மின்சாரம்
சம்சாரம் அது மின்சாரம்
சம்சாரம் அது மின்சாரம்


இந்த சொந்தம் என்ன சொந்தம் யாருக்கும் தோணல
வாய் தொறந்து சொல்ல வந்த வார்த்த வரல
வானவில்ல சின்ன புள்ள வளைக்க பார்க்குது
ஆகாயத்தில் ஊஞ்சல் கட்ட ஆசப்படுது
சிறகொன்னு மொளைக்குமுன்னே பறக்குது பட்டாம்பூச்சி
காமதேவன் ராஜாங்கத்தில் இது ஒரு கண்ணாமூச்சி
ஆத்துமேட்டில் எழுதி வைச்சத அலை அடிச்சது அண்ணாச்சி

சம்சாரம் அது மின்சாரம்
சம்சாரம் அது மின்சாரம்
அன்பு கொள்ள ஆளுமுண்டு
நெஞ்சுக்குள்ள ஈரமுண்டு சம்சாரம்
பந்தமுண்டு பாசமுண்டு 
சொந்தத்துக்கும் உள்ளமுண்டு சம்சாரம்
சூட்சமத்த தெரிஞ்சுகிட்டா ஒளி கொடுக்கிற மின்சாரம்

சம்சாரம் அது மின்சாரம்
சம்சாரம் அது மின்சாரம்

No comments:

Post a Comment