தூங்காத கண்ணென்று ஒன்று - Thoongaatha Kannendru Ondru Lyrics

தூங்காத கண்ணென்று ஒன்று
துடிக்கின்ற சுகமென்று ஒன்று
தாங்காத மனமென்று ஒன்று
தந்தாயே நீ என்னைக் கண்டு

தூங்காத கண்ணென்று ஒன்று
துடிக்கின்ற சுகமென்று ஒன்று
தாங்காத மனமென்று ஒன்று
தந்தாயே நீ என்னைக் கண்டு

தூங்காத கண்ணென்று ஒன்று
துடிக்கின்ற சுகமென்று ஒன்று


முற்றாத இரவொன்றில் நான் வாட
முடியாத கதை ஒன்று நீ பேச
முற்றாத இரவொன்றில் நான் வாட
முடியாத கதை ஒன்று நீ பேச
உற்றாரும் காணாமல் உயிரொன்று சேர்ந்தாட
உண்டாகும் சுவையொன்று ஒன்று
உற்றாரும் காணாமல் உயிரொன்று சேர்ந்தாட
உண்டாகும் சுவையொன்று ஒன்று

தூங்காத கண்ணென்று ஒன்று


யார் என்ன சொன்னாலும் செல்லாது
அணை போட்டு தடுத்தாலும்  நில்லாது
யார் என்ன சொன்னாலும் செல்லாது
அணை போட்டு தடுத்தாலும்  நில்லாது
தீராத விளையாட்டு திரை போட்டு விளையாடி
நாம் காணும் உலகென்று ஒன்று
தீராத விளையாட்டு திரை போட்டு விளையாடி
நாம் காணும் உலகென்று ஒன்று

தூங்காத கண்ணென்று ஒன்று


வெகு தூரம் நீ சென்று நின்றாலும்
விழி மட்டும் தனியாக வந்தாலும்
வெகு தூரம் நீ சென்று நின்றாலும்
உன் விழி மட்டும் தனியாக வந்தாலும்
வருகின்ற விழி ஒன்று தருகின்ற பரிசென்று
பெறுகின்ற சுகமென்று ஒன்று
வருகின்ற விழி ஒன்று தருகின்ற பரிசென்று
பெறுகின்ற சுகமென்று ஒன்று

தூங்காத கண்ணென்று ஒன்று.. ஆ.. ஆ.. ஆ..
துடிக்கின்ற சுகமென்று ஒன்று.. ஆ.. ஆ.. ஆ..
தாங்காத மனமென்று ஒன்று...ஆ.. ஆ.. ஆ..
தந்தாயே நீ என்னைக் கண்டு...ஆ.. ஆ.. ஆ

தூங்காத கண்ணென்று ஒன்று.. ஆ.. ஆ.. ஆ

No comments:

Post a Comment