வெண்ணிலாவின் தேரிலேறி - Vennilaavin Theril Yeri Lyrics

வெண்ணிலாவின் தேரிலேறி 
காதல் தெய்வம் நேரில் வந்தாளே
மானமுள்ள ஊமை போல 
கானம் கேட்க கூசி நின்றேனே

நிறங்கண்டு முகங்கண்டா நேசம் கொண்டேன்
அவள் நிழல்கண்டு நிழல்கண்டே நான் பாசம் கொண்டேன்

வெண்ணிலாவின் தேரிலேறி 
காதல் தெய்வம் நேரில் வந்தாளே

அட கைநீட்டும் தம்பியே
எனை கட்டி வைத்தாள் அன்னையே
நீ வெட்டினாலும் நீரை வார்க்கும் இந்த பாறையே

அட கைநீட்டும் தம்பியே
எனை கட்டி வைத்தாள் அன்னையே
நீ வெட்டினாலும் நீரை வார்க்கும் இந்த பாறையே


நிறங்கண்டு முகங்கண்டா நேசம் கொண்டேன்
அவள் நிழல்கண்டு நிழல்கண்டே நான் பாசம் கொண்டேன்

வெண்ணிலாவின் தேரிலேறி 
காதல் தெய்வம் நேரில் வந்தாளே

காலழகு மேலழகு கண்கொண்டு கண்டேன்
அவள் நூலவிழும் இடையழகை நோகாமல் தின்றேன்
கத்தி மூக்கில் காதல் நெஞ்சை 
காயம் செய்து மாயம் செய்தாளே

அட கைநீட்டும் தம்பியே
எனை கட்டி வைத்தாள் அன்னையே
நீ வெட்டினாலும் நீரை வார்க்கும் இந்த பாறையே


அவள் சிக்கெடுக்கும் கூந்தலுக்கு
சீப்பாக இருப்பேன்
இல்லை செந்தாமரை பாதத்தில் செருப்பாகப் பிறப்பேன்
அண்டமெல்லாம் மிண்டு போகும்
கொண்ட காதல் கொள்கை மாறாது

அட கைநீட்டும் தம்பியே
எனை கட்டி வைத்தாள் அன்னையே
நீ வெட்டினாலும் நீரை வார்க்கும் இந்த பாறையே

நன்றி: வைரமுத்து

No comments:

Post a Comment